முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்றிய பெட்ரோல் விலையை திரும்ப பெற வலிறுத்தல்

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.3 - விலைக்குறைப்பு என்ற கண்துடைப்பு நாடகத்தில் அரங்கேற்றாமல் ஏற்றுப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 23.5.2012 நள்ளிரவு முதல் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்று உயர்த்தி மக்கள் மீது தாங்கொணா சுமையை ஏற்றியது.  மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக விலைவாசி ஏறிவரும் நிலையில் மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் இந்த பெட்ரோல் விலை உயர்வு உள்ளது என்பதை அன்றே நான் சுட்டிக்காட்டி, எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன்.  

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயல் காரணமாக ஏழை எளிய, நடுத்தர மக்களின் மாதவருமானத்தில் பெருமளவு பற்றாக்குறை ஏற்படும் என்பதையும், மக்களின் வாங்கும் சக்தி மற்றும் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சி அடையும் என்பதையும் சுட்டிக்காட்டி, பெட்ரோலுக்கான இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தேன்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தப் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, மாவட்டந்தோறும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.  பல்வேறு அமைப்புகளும், பலதரப்பட்ட மக்களும் இந்த விலை உயர்வுக்கு நாள்தோறும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  

இந்த நிலையில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் 2 ரூபாயை இன்று நள்ளிரவு முதல் குறைத்துள்ளது.  இந்த விலைக் குறைப்பு ``யானைப் பசிக்கு சோளப்பொறி என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.   உயர்த்தப்பட்ட 7 ரூபாய் 50 பைசாவில் 2 ரூபாய் குறைப்பு என்பது ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன் தராது.  இந்த சிறிய அளவிலான விலை குறைப்பு மக்களின் கோபத்தை எந்தவிதத்திலும் தணித்துவிடாது. இதற்குப்பின்னும், பெட்ரோல் விலை ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு சுமையானதாகவே இருக்கும்.  எனவே, இத்தகைய விலை குறைப்பு என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றாமல், ஏற்றப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago