முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் வாகனங்களில் பணம் கடத்தல் தேர்தல் ஆணையம் சரமாரி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 30 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 30 - வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, போலீஸ் வாகனங்களில் பணம் கடத்தப்படுகிறது, இதற்கு சில உயர் அதிகாரிகளே உடந்தையாக இருக்கிறார்கள் என்று தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் கூறியுள்ளது. தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை நடத்துவதை தடை விதிக்க கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தில்லை நடராஜன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை nullநீதிபதி இக்பால், நீnullதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக வெற்றிச் செல்வன் என்ற வக்கீல் பொது நலவழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தன் மனுவில் தலைமை தேர்தல் கமிஷனின் உத்தரவுபடி தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு வாகன சோதனை செய்வதற்கு பறக்கும் படை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவை கண்காணிக்கும் குழுவின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றை nullநீதிபதியிடம் கொடுத்தார். பிறகு அவர் வாதாடுகையில் கூறியதாவது:-​ தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவே பறக்கும் படைகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படுகிறது. என்றாலும் போலீஸ் ஜீப்பிலேயே பணத்தை கடத்துகிறார்கள். அந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது? எங்கே எடுத்து செல்லப்படுகிறது? எதற்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது? பணத்தை கொண்டு செல்ல கூறியது யார்? என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது கிடைத்த தகவல்களால் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்தது.  அந்த பணத்தை போலீஸ் உயர் அதிகாரிகளே எடுத்துச் செல்கின்றனர். வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் திட்டமிட்டு கடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இதுவரை வாகன சோதனை தொடர்பாக 2900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிகளை மீறியதாக 48 ஆயிரம் வழக்குகள் பதிவாதி உள்ளன. போலீஸ் ஜீப்பில் பணம் கொண்டு சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை தோல்வி அடைய செய்யும் விதமாக சில போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் முதல் முறையாக தன் அதிகாரத்தை இப்போதுதான் சரியாக பயன்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கை பிடிக்காத சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். 

இவ்வாறு வக்கீல் ராஜகோபாலன் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்