முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் தர போட்டிகளில் விளையாட யுவராஜ்சிங் விருப்பம்

வியாழக்கிழமை, 7 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். - 7 - இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் முன்பாக ரஞ்சி உள்ளிட்ட முதல் தர போட்டிகளில் யுவராஜ்சிங் விளையாடுவார் என்று தெரிகிறது.  இது தொடர்பாக அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், புற்று நோயிலிருந்து குணமடைந்து வரும் அவருக்கு சமீபத்தில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் முடிவுகளை பார்த்த போது சற்றேறக்குறைய அவர் முழுமையாக குணமடையும் நிலையை எட்டி விட்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இன்னும் 2 ஆண்டுகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு 5 மாதத்திற்கு ஒரு முறையும் அவரது உடல் நிலை எப்படி உள்ளது என்பதை கண்டறிய ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும்.  இப்போது அவர் கொஞ்சம் பலவீனமாக இருந்தாலும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவருடைய புத்தாக்க பயிற்சி முகாம் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. ஆனாலும் எப்போது கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. வெயிலில் தன்னால் விளையாட முடியுமா என்பதை சோதிப்பதற்காக டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் கிரிக்கெட் விளையாடலாம். சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவதற்கு முன்னதாக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என்றார். யுவராஜ் மனதளவில் திடமாக இருக்கிறார் என்பதை டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, இன்று நல்ல நாள், எனது ஸ்கேன் முடிவு ரத்த பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. நான் நல்ல நிலையில் உள்ளேன். எனது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது மகிழ்ச்சியளிக்கிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் நானும், இஷாந்த் சர்மாவும் டென்னிஸ் பந்தில் 4 ஓவர் கிரிக்கெட் விளையாடினோம். என்னுடைய பந்தில் இஷாந்த் சர்மா 6 சிக்சர் அடித்தார். அவருடைய கடைசி பந்தில் 7 வது சிக்சரை அடித்து வெற்றி பெற்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்