முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் கடும் பயிற்சிகளை மேற் கொள்ள விரும்புகிறேன்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், ஜூன். 22 - லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக நான் இன்னும் கடும் பயிற்சிகலை மேற்கொள்ள விரும்புகிறேன் என்று இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்க னையான சாய்னா நெக்வால் தெரிவி த்து இருக்கிறார். சமீபத்தில் நடந்த இரண்டு சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து அவர் பட்டம் வென்றதன் மூலம் அவரது தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது. இருந்த போதிலும் அவர் மேற்கண்டவாறு கூறி யிருக்கிறார். 

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நெக்வால் தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய ஓபன் போட்டிகளில் அடுத்தடுத்து பட்டம் வென்று சாதனை படைத்தார். 

இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக் போ  ட்டியில் எதிரணி முன்னணி வீராங்க னைகளுக்கு கடும் சவாலை அளிக்கக் கூடிய வீராங்கனை என்ற எச்சரிக்கை யை அவர் விடுத்து இருக்கிறார். 

ஆந்திராவின் தலைநகரான ஐதராபாத் தில் நிருபர்களைச் சந்தித்த போது, அவ ர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு இருக்கிறார்.  

இந்த விளையாட்டைப் பொறுத்தவ ரை நான் இன்னும் முன்னேற வேண்டி உள்ளது. இதற்காக இன்னும் கடும் பயிற்சி எடுக்க விரும்புகிறேன். கடந்த 2 போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடினேன். இருந்த போதிலும் இன் னும் சில பலவீனமான பகுதிகள் உள்ளன. இதனைப் போக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்