முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் புதிய பிரதமருக்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.- 24 - பாகிஸ்தானில் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜா பர்வேசுக்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சுப்ரீம் கோர்ட்டினால் தண்டிக்கப்பட்ட யூசப் ராஜா கிலானி தனது பிரதமர்பதவியை ராஜினாமா செய்ததை  தொடர்ந்து  ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி  சார்பில் மக்தூம் சகாபுதீன் என்பவர் பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக கைது  வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து  நேற்று முன்தினம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ராஜா   பர்வேஷ் அஸ்ரப் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும்  செய்து வைத்தார். 61 வயதான ராஜா பர்வேஷ் பாகிஸ்தான் ஆளும்  கட்சியை  சேர்ந்தவர். இவர் பூட்டோவின் குடும்பத்திற்கு  மிகவும் நெருக்கமானவர். இவர் பாகிஸ்தானின் புதியபிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து இவருக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இவரது பதவிக்காலத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே  தீர்க்கப்படாமல் இருக்கும்   பிரச்சினைகளுக்கு  தீர்வு ஏற்பட இரு நாட்டு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் என்றும் மன்மோகன் சிங் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்