முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி: தலைவர்கள் கண்டனம்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 -  தாம்பரம் விமானப்படை தளத்தில் இலங்கை விமானப்படை வீரர்கள் 9 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை வீரர்களை உடனே திருப்பி அனுப்பவும் கருணாநிதி ``தமிழகத்திற்கு பயிற்சி வந்த இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக மத்திய அமரசு திருப்பியனுப்ப வேண்டும்'' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கேபாலபுரம் வீட்டில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாநிதியிடம், இலங்கையின் விமானப் படையைச் சேர்ந்த ஒரு சிலருக்கு தாம்பரத்தல் பயிற்சி அளிப்பதாக சொல்லப்படுகிறதே என்று கேட்டு கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கருணாநிதி, அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது. பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பியனுப்புவதே சரியாக இருக்கும் என்றார்  கருணாநிதி.

இது தொடர்பாக  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:​ ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசின் விமானப்படை யினருக்கு, இந்திய அரசு ரேடார்களும், ஆயுதங்களும் கொடுத்து பயிற்சியும் அளித்தது. வெந்த புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பதுபோல், தற்போது சிங்கள விமானப் படையினருக்கு தாய்த்தமிழகத்திலேயே சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பயிற்சி கொடுத்து வருகின்ற கொடுமை நடக்கிறது. இது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். தாம்பரத்தில் உள்ள சிங்கள விமானப்படையினரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுவதோடு, இந்தியாவில் வேறு எந்த இடத்திலும் பயிற்சியும் அளிக்கக் கூடாது. அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் தாம்பரம் விமானப்படை தளத்திற்கு எதிரே மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறேன். 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 9 வீரர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொலைகார சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது. சிங்கள அரசின் இந்த படுபாதக செயல்களை எல்லாம் கண்டிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து எழுந்த குரல்களை கண்டுக்கொள்ளாத மத்திய அரசு, தற்போது சிங்களப் படையினருக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். இலங்கைப் போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றம் இழைத்த சிங்களப்படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். எனவே தாம்பரம் விமானப்படை நிலையத்தில் சிங்கள வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்தி, அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது: கடந்த 2009 மே மாதம் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் போரில் தமிழன மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசுக்கு தொடர்ச்சியாக இந்திய அரசு துணைபோவது தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். போரின்போது சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா பல்வேறு வகைகளில் உதவி செய்துள்ளது. ஒரு மாபெரும் இன அழிப்பை செய்து சர்வதேச போர்க் குற்றவாளி என அனைத்துலக நாடுகளின் கண்டனத்திற்குள்ளாகி உள்ள சிங்கள இனவெறி அரசின் ராணுவத்தினருக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் ராணுவப் பயிற்சி அளிப்பதற்கு இந்திய அரசு அனுமதித்திற்கிறது. ராணுவ பயிற்சிக்காக தமிழகம் வந்துள்ள சிங்கள ராணுவத்தினரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் இல்லையேல் விடுதலை சிறுத்தைகள் அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago