முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூரில் கருணாநிதியின் தேர் நகரவில்லை - தா. பாண்டியன்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி,ஏப்.2 - இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் கூறினார். ஸ்ரீவில்லி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பொன்னுப்பாண்டியனை ஆதரித்து பேசிய அவர் மேலும் கூறுகையில், கருணாநிதி ஆட்சியில் மணல் கொள்ளை, நில மோசடி, ஊழல் என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 

திருவாரூரில் கருணாநிதியின் தேர் நகரவில்லை. பொதுமக்கள் சேர்ந்து இழுத்தால்தான் நகரும். தென்காசி மக்களவை தொகுதி உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் லிங்கத்தை தேர்வு செய்தீர்கள். அவரை உலக பத்திரிக்கைகளே பாராட்டி எழுதியுள்ளன. இத்தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பொன்னு பாண்டியனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தை தலைநிமிர்ந்த மாநிலமாக்க அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்