எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை ஏப்-3 - மதுரை மேலூரில் தாசில்தார் மீது அழகிரி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று நெல்லை டவுன் வாகையடி முனையில் நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பழனி, ராதாபுரம் தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் மைக்கேல் ராயப்பன், நாங்குநேரி தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் தேர்தல். அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெற்று தரும் தேர்தல். தி.மு.க. ஆட்சியில் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி எந்தநடவடிக்கையும் எடுத்தாரா என்றால் நிச்சயமாக இல்லை. இந்த ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை 9 முறை உயர்ந்துள்ளது. ரூ.15 ஆக இருந்த அரிசி விலை ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. ரூ.13 ஆக இருந்த சர்க்கரை விலை ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. ரூ.28 ஆக இருந்த துவரம் பருப்பு விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. ரூ.35ஆக இருந்த புளி ரூ110 ஆக உயர்ந்துள்ளது. ரூ.35 ஆக இருந்த பூண்டு விலை 250 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரூ.2500க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்போது ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் தற்போது ரூ.280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்ட செங்கல் தற்போது ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகிறது. மின் மிகுதியாக இருந்த தமிழகம் மின்வெட்டு மாநிலமாக மாறியுள்ளது. இதனால் ஜவுளி,நெசவு,விவசாயம் போன்ற தொழில்கள் நலிவடைந்து போனது. தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் ஆட்சியல்ல ரவுடி கும்பலின் ஆட்சி நடைபெறுகிறது. காவல்துறை கருணாநிதியின் ஏவல்துறையாக மாறிவிட்டது.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான் கருணாநிதியின் தாரக மந்திரம். ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் டி.வி. உள்ளிட்ட பல்வேறு தொழில்களை கருணாநிதியின் குடும்பத்தினர் துவக்கியுள்ளனர். மக்கள் பணத்தை சுருட்டி தம் மக்கள் வாழ வகை செய்தவர் கருணாநிதி. அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. திருவாரூரிலிருந்து திருட்டு ரயில் ஏறிவந்த கருணாநிதி 5 முறை முதல்வராகியுள்ளார். இதன்மூலம் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர். உலக பணக்காரர்களின் பட்டியலில் தம் குடும்ப உறுப்பினர்கள் முதலிடம் பெறவேண்டும் என்பதே கருணாநிதியின் ஆசை. திரைப்படத்துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை கருணாநிதியின் குடும்பத்தினர் கபளீகரம் செய்து விட்டனர். மதுரை மாவட்டம் மேலூரில் தேர்தல் பணியிலிருந்த தாசில்தார் அழகிரியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். தற்போது நடைபெற்று கொண்டிருப்பது மக்கள் ஆட்சியல்ல ஒரு குடும்ப ஆட்சி. இந்த தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்தி கருணாநிதியின் குடும்பத்தை அப்புறபடுத்த வேண்டும். இந்த மாவட்டத்திலுள்ள தொகுதிகளின் பிரச்சனைகளை நான் நன்கறிவேன்.
இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆசியோடு அ.தி.மு.க. ஆட்சியமைந்தால் நெல்லை தொகுதிக்குட்பட்ட மானூர் புதிய தாலுகாவாக மாற்றப்படும். அங்கு பத்திரபதிவுத்துறை அலுவலகமும் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கான பணி நிரவல் முறை திருத்தி அமைக்கப்படும். பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், ஆகிய தொகுதிகளின் பிரச்சனைகளும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கிறிஸ்தவர்களின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட வக்புபோர்டு சொத்துக்கள் மீட்கப்படும். இஸ்லாமிய திருமணம் குறித்த கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலனை செய்யப்படும். மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். ரூ.1லட்சத்து 80 ஆயிரம் செலவில் நவீன பசுமை வீடுகள் அமைத்து தரப்படும். ஆதரவற்றோர், ஊனமுற்றோருக்கான உதவித்தொகை ரூ.1000 மாக உயர்த்தப்படும். கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை ரூ.2500 ஆக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருட்கள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும். சுய உதவி குழுக்களுக்கு 25 சதவிகித மானியத்தில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும். 58 வயது நிறைந்த முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். சூரிய ஒளி மூலம் மின் வசதி செய்து தரப்படும். நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். சாலைகள், போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும். நெசவாளர்கள், விவசாயிகள்,மீனவர்களின் பாதுகாப்புகள் உறுதிசெய்யப்படும். உழவர் பாதுகாப்புத்திட்டம் புதிய பொலிவுடன் செயல்படுத்தப்படும். ரவுடிகளால் அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். எனவே குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள் என்று அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.