எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.3 - சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தகராறுகள் ஆரம்பித்து தொகுதி தகராறுகள் வரை தி.மு.க. கூட்டணியினரின் குதிரைகள் நொண்டிக்கொண்டே ஓடுகிறது. காங்கிரஸ் குதிரை கோஷ்டி சண்டை என்னும் இரும்பு குண்டை கட்டிக்கொண்டு ஓடுகிறது.
எந்த தொகுதியிலும் தி.மு.க.வினர் காங்கிரசார் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்வதில்லை தி.மு.க.விலும் காங்கிரசிலும் மக்களை சந்திக்கும் கவர்ச்சிகர தலைவர்கள் இல்லை. கருணாநிதிக்கு கூட்டம் குறைவாக கூடுகிறது. வி.ஐ.பி. விஜயகாந்தின் அனல்பறக்கும் பிரச்சாரத்தை தாங்க முடியாதவர்கள் காமெடி நடிகர் வடிவேலுவை அழைத்து வந்து காமெடி பண்ணுகிற நிலையை காணமுடிகிறது.
இந்நிலையில் கருத்துக்கணிப்புகள் மக்கள் எண்ணங்கள் தமது கூட்டணிக்கு எதிராக இருப்பதால் மிரண்டுபோன தி.மு.க.வினர் தனது குடும்ப தொலைக்காட்சியிலும், தாத்தா தொலைக்காட்சியிலும் சித்து வேல செய்து மக்களை குழப்பும் வேலையினை ஆரம்பித்துள்ளனர்.
கொல்றாங்களே, கொல்றாங்களே என்று டப்பிங் வாய்ஸ் கொடுத்த குடும்ப தொலைக்காட்சியின் வியாதி தாத்தா தொலைக்காட்சிக்கும் வந்து விட்டது. விஜயகாந்தின் பிரச்சார தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாமல் மைக் கீழே விழுந்தமைக்காக தோளில் தட்டி தனது உதவியாளரை எடுக்கச் சொன்ன விஜயகாந்தின் அத்தகைய காட்சியை அருகருகே ஒட்டவைத்து திரும்ப அந்த நபரை விஜயகாந்த் அடிப்பதுபோல் காண்பித்து அதற்கு டப்பிங் சவுண்டும் கொடுத்து ஒளிபரப்பினர் அடிப்பட்டவரை வேட்பாளர் என்றனர். ஆனால் அந்த காட்சியில் வருபவருக்கு தலையில் முடி கிடையாது. தர்மபுரி வேட்பாளர் தலையெல்லாம் முடி உள்ளவர்.
இதேபோல் தான் பேசும்போது முகத்தை மறைக்கும் கொடியை விஜயகாந்த் இறக்க சொல்லும் காட்சியை காட்டி அ.தி.மு.க. கொடியையும் காட்டி சிண்டு முடியும் வேலையில் இரண்டு தொலைக்காட்சிகளும் இறங்கி உள்ளன.
இதன் உச்சகட்டமாக ஜெயலலிதா கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்கள் கண்டு கொல்ளாத ஜெயலலிதா என்று தாத்தா தொலைக்காட்சி திரும்ப திரும்ப நேற்று ஒளிபரப்பியது.
அதில் ஜெயலலிதா பேசும் கூட்டத்தில் பெண்கள் அதிகம் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சரிந்து விழுகின்றனர் போலீசார் அவர்களை தூக்கி விடுகின்றனர். இதை வைத்து பெண்கள் மயங்கினர். ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை என்றும் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டார் என்றும் ஒளிபரப்புகின்றனர்.
இந்த பொய் செய்தி ஒளிபரப்பான போது பழைய ஞாபகங்கள் வந்தது. தி.மு.க.வினர் ஏதோ மனசாட்சி உள்ளவர்கள் போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அவர்களுடைய மனசாட்சி சாம்பிளுக்கு சில விஷயங்கள் கடந்த ஆண்டு சுகாதார துறை மந்திரி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் ஐ.ஏ.எஸ். மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புகின்றனர். வழியில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடக்கிறார். அவரை பார்த்து வண்டியை நிறுத்திய அமைச்சர் மற்றும் உடன் சென்ற அதிகாரிகளும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர். உயிருக்கு போராடிய எஸ்.ஐ. தண்ணீர் கேட்டபோது தண்ணீர்கூட கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி அமைச்சர் நின்றார். வெட்டுபட்டவரை உடனடியாக தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றி உடனே சிகிச்சை அளித்திருந்தால் ஒரு காவல் அதிகாரியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம், ஆனால் மனசாட்சி உள்ள தி.மு.க. அமைச்சர் அல்லவா? அதனால் அதிகாரி சாவதை வேடிக்கை பார்த்தபடி நின்றார். இந்த காட்சியை பார்த்து உலகமே வேதனைபட்டது.
இதேபோல் அமைச்சர் மைதீன் கான் கார் ஒரு பாதசாரி மீது மோதிவிட்டு விபத்தில் சிக்கியவவை காப்பாற்ற கூட முயற்சிக்காமல் தப்பி ஓடிவிட்டது. இதெல்லாம் தி.மு.க.வினரின் மனசாட்சிக்கு சில சான்றுகள் சொந்த காட்சியின் அமைச்சரையே கொன்றதாக அழகிரி மேல் குற்றசாட்டு கூறப்பட்டது.
சில பெண்கள் மயங்கி விழுந்ததை ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லையாம் அவருக்கு மனசாட்சி இல்லையாம். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி வள்ளலார் போல் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர். 539 தமிழக மீனவர்களை துள்ள துடிக்க சண்டைக்காய் நாடு இலங்கை ராணுவத்தினர் கொன்றபோது கடிதம் எழுதுகிறேன் என்று பாவ்லா காட்டியவர். அப்பொழுது கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா? 539 தமிழக மீனவ பெண்கள் விதவை ஆனதை வேடிக்கை பார்த்தது மனசாட்சி உள்ள செயலா?
ஜெயலலிதா தி.மு.க. கட்சியினரையும், அரவணைத்து உதவியவர் கருணாநிதி சொந்த கட்சிக்காரனுக்கு கூட உதவாதவர். தி.முக.. விசுவாசியாக இருந்த எஸ்.எஸ்.சந்திரன் தனது சிகிச்சைக்கு பணமின்றி தவித்தபோது கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தபோது உரிய சிகிச்சை அளித்து உதவியதால் அ.தி.மு.க.வில் இணைந்த எஸ்.எஸ்.சந்திரன் கடைசிவரை அந்த நன்றியை மறக்காமல் இருந்தார். இதேபோல் தி.மு.க. மேடை பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் இக்கட்டான குடும்ப பிரச்சனை கராணமாக கருணாநிதியிடம் உதவி கேட்க நானே கஷ்டப்படுகிறேன். இதில் உனக்கு எங்கு நான் பணம் தர என்று கூறியதாக கூறப்பட்டது. பின்பு ஜெயலலிதாவிடம் தீப்பொறி ஆறுமுகம் உதவி கேட்டபோது வேண்டிய பணத்தை கொடுத்து புது கார் ஒன்றையும் ஜெயலலிதா தீப்பொறி ஆறுமுகத்திற்கு கொடுத்தார். இதுபோல் பல விஷயங்கள் சொல்லலாம். பண வசதி இல்லாமல் கருணாநிதியால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்த அவரது மகன் மு.க.முத்து உதவி கேட்டுபோனபோது அவருக்கு ரூ.5 லட்சம் உதவி செய்தவர் ஜெயலலிதா.
குடும்ப தொலைக்காட்சிக்கும், தாத்தா தொலைக்காட்சிக்கும் தோல்வி பயம் வந்துவிட்டதால் பொய்யான விஷயங்களை உண்மையாக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள். என்ன ஜகஜ்ஜால வேலை செய்தாலும் பிரச்சினைகள் தான் மக்களை சிந்திக்க வைக்கும். அதுதான் இந்த ஆட்சிக்கு முடிவுரையும் எழுதும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.