முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஜி அதிபருடன் ஜனாதிபதி சந்திப்பு

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.9  - இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிஜி அதிபர் ராத்து ஏடேலி நைலதிகாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார். பிஜி அதிபர் ராத்து ஏபேலி நைலதிகாவ் ஒலிம்பிக் போட்டிகளை பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தார். அங்கிருந்து பிஜி செல்லும் வழியில் தனிப்பட்ட பயணமாக டெல்லிக்கு வந்தார். அவரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார். 

அப்போது இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது என்று பிரணாப் தெரிவித்தார். இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பிரணாப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் இந்தியாவுக்கு வந்த முதல் வெளிநாட்டு தலைவர் ராத்து ஏபேலி நைல்திகாவ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்