எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.- 4 - மதுரையில் நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பூரண கும்பத்துடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரை காளவாசலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரது பேச்சை கேட்பதற்காக அந்த பகுதியில் அலைகடலென மக்கள் திரண்டிருந்தனர். கோடை வெய்யிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வெள்ளம்போல் திரண்டு ஜெயலலிதாவின் பேச்சை கேட்டார்கள். முன்னதாக நேற்றுமாலை 4-15 மணி அளவில் ஜெயலலிதா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அவரை பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட கழக செயலாளர்கள் செல்லூர் கே.ராஜூ, எம்.முத்துராமலிங்கம் வேட்பாளர்கள் ஏ.கே.போஸ், கா.தமிழரசன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜெயலலிதா பிரசார வேனில் ஏறி வெளியே வந்தார். அவருக்கு நத்தம் ரோட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்பத்துடன் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதா பிரசார வேனில் தல்லாகுளம், கோரிப்பாளையம், செல்லூர் வந்தார். அங்கு கைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு எங்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று உரத்த குரலில் கேட்டுக்கொண்டனர். பின்னர் கைலாசபுரம்,ஈ.எஸ்.ஐ. பாத்திமா கல்லூரி சந்திப்பு வழியாக தீக்கதிர் அலுவலகம் பெத்தானியபுரம் பகுதியை வந்தடைந்தார். அங்கு கட்டிட சங்க தொழிலாளர்கள், வெள்ளையடிக்கும் தொழிலாளர்கள், சுண்ணாம்பு காளவாசலில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், ஒர்க்ஸ்ஷாப்பில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இருபுரமும் திரண்டு நின்று இரட்டை விரலை காண்பித்து தங்களது ஆதரவை வரவேற்பின் மூலம் தெரிவித்தனர். பின்னர் காளவாசலை வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பழங்குடி மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆண்கள் சாட்டை அடித்தும் பெண்கள் உருமி அடித்தும் ஆட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன் பின்னர் காளவாசலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில் மதுரை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைபாண்டி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, துணைச்செயலாளர் சி.தங்கம், இணைச்செயலாளர் குமுதா, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், அணி செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், ஷ.ராஜலிங்கம், கா.டேவிட் அண்ணாதுரை, வையைமாரி, பகுதிகழக செயலாளர்கள் கே.ஜெயவேல், தளபதி ஆர்.மாரியப்பன், பூமிபாலகன், அண்ணாநகர் என். முருகன், தொகுதி கழக செயலாளர்கள் மேற்கு எஸ். மாரியப்பன், மத்தி எஸ்.குமார்,வடக்கு எம்.ரவிச்சந்திரன், தெற்கு எம்.ரவீந்திரன், வடக்குத்தொகுதி இணைச்செயலாளர் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணி, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பேங்க் மாரியப்பன், மேற்குதொகுதி இளைஞரணி செயலாளர் ஆட்டோ விஜயன், மாவட்ட பேரவை துணைத்தலைவர் புதூர் அபுதாகீர், வடக்கு 1-ம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.கே.நகர் மணி, மத்திய 1-ம் பகுதி இளைஞரணி செயலாளர் கே.எஸ்.சஷிகுமார், தொகுதி கழக இணைச்செயலாளர் செல்லூர் எம்.எஸ்.சுப்பு, மகளிரணியை சேர்ந்த தேனம்மாள், தெய்வம் கணபதி, கேசவ பாண்டியம்மாள், புதூர் பாப்பா, ஆர்.ஜோதி, எம்.கல்யாணி, பி.புஷ்பா, வேலம்மாள், டி.ஜெயபாக்கியம், எம்.செல்வி, கணபதி, பாண்டியம்மாள், தலைமைகழக பேச்சாளர் அழகரடி ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் பிரசாரத்தை முடித்துக்கொண்ட ஜெயலலிதா காளவாசலில் இருந்து புறப்பட்டு அரசரடி,புதுஜெயில்ரோடு, கிரம்மர் புரம், கரிமேடு, மதுரா கோட்ஸ் மேம்பாலம், சிம்மக்கல், யானைக்கல், வழியாக சென்றார். அந்த பகுதியில் அவருக்கு ரோட்டின் இருபுறமும் இருந்து பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் யானைக்கல், கல்பால மேம்பாலம், கோரிப்பாளையம் தேவர் சிலை தல்லாகுளம், அழகர்கோயில் ரோடு வழியாக சங்கம் ஓட்டலை அடைந்து ஜெயலலிதா நேற்று இரவு அங்கு தங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.