முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை மருத்துவர் பணிக்குவிருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 14 - தமிழ்நாடு நீர்வள, நிலவளத்திட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் தெற்காறு உபவடிநிலப்பகுதியில் நாட்டார்மங்கலம் தெற்காறு உபவடி நிலப்பகுதி மற்றும் தங்களாச்சேரி மேல்குண்டாறு நாட்டார்மங்கலம் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தொகுப்பு கால்நடை மருந்தகங்களில் கால்நடை மருத்துவராக பணியாற்ற பி.வி.எஸ்ஸி பட்டம் பெற்ற வேலையில்லாத பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது. இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தொழில்நுட்ப சேவைக்கட்டணம் ரூ.8000 வழங்கப்படும்.  விருப்பமுள்ளவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் 17.08.2012 அன்று மாலை 6.00 மணியளவில்   நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.முகவரி:  மண்டல இணை இயக்குநர்,கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர் தங்கராஜ் சாலை,கால்நடை மருத்துவமனை வளாகம்,தல்லாகுளம் மதுரை என்ற முகவரியில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது என்று கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்