முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திரதின விழாவில் ராணுவஅதிகாரி பிரிகேடியர் தேவதாஸ் பேச்சு

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், ஆக. - 16 - மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.  கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். பொருளாளர் கோவிந்தராஜன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன், சுயநிதி பிரிவு ராஜா கோவிந்தசாமி, கண்காணிப்பாளர் அழகர்சாமி, முதல்வர் பொறுப்பு பன்னீர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரிகேடியர் தேவதாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது,  உங்களை வளர்த்து ஆளாக்கிய இந்தியா முன்னேற பாடுபடுங்கள். வருங்காலத்தில் சிறப்பான, நேர்மையான அரசியல்வாதியாக மாணவர்கள் உருவாக வேண்டும். டாக்டராக வேண்டும். என்ஜீனியராக வேண்டும் என்றுதான் மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பேராசிரியர்களாகவோ, அரசியல்வாதிகளாகவோ யாரும் வர விரும்புவதில்லை. அரசியலுக்கு வர மாணவர்கள் அஞ்சக் கூடாது என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்