முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த மீனவரின் குடும்பத்திற்கு முதல்வர் நிதிஉதவி

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.17 - அபுதாபியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகுகள் மோதியதில் மரணமடைந்த தமிழக மீனவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி செய்ய உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

15.8.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம், தோப்புவலசையை சேர்ந்த மீனவர்கள் துபாய் நாட்டில் அபுதாபி என்ற இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல் அலையின் சீற்றத்தால் இரு படகுகள் மோதிக் கொண்டதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி மகன் எம்.முருகேசன் என்ற மீனவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.   

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் முருகேசனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இறந்த முருகேசன் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். 

இந்த விபத்தில் காலமான முருகேசன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்