எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.- 5 - ஓட்டு எனும் ஆயுதம் மூலம் தி.மு.க. கூட்டணியை மக்கள் சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் பேசினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க வேட்பாளர் ஏ.கே.டி. ராஜாவை ஆதரித்து திருப்பரங்குன்றத்தில் அக்கட்சி நிறுவனர் விஜயகாந்த் பேசியதாவது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தொடங்கிய பின்னர் முதல் மாநாட்டை நடத்தினார். நானும் திருப்பரங்குன்றம் அருகே மாநாடு நடத்தி கட்சியை துவக்கினேன். அதனால்தான் திருப்பரங்குன்றம் தொகுதியை தே.மு.தி.க. விற்காக அ.தி.மு.கவிடம் கேட்டுப் பெற்றேன். முருகப் பெருமான் சூரனை தன் வேலால் வதம் செய்து தேவர்களை காப்பாற்றினார். அதைப் போன்று மக்களாகிய நீங்கள் ஓட்டு எனும் ஆயுதம் மூலம் ஏப்ரல் 13 ம் தேதி தி.மு.க. கூட்டணியினரை வதம் செய்து அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். என்னை மதுரைக்கு வர முடியுமா என அழகிரி கேட்கிறார். நான் மதுரையில் பிறந்தவன்தான். அழகிரிதான் வெளியூரில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார்.
எனது மானசீகமான குரு எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் தொடங்கிய அ.தி.மு.க.வுடன்கூட்டணி வைத்துள்ளேன். தமிழக மக்களையும், தமிழகத்தையும் கருணாநிதி குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்பதற்காகவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். கூட்டணியை நானாக முடிவு செய்யவில்லை. தொண்டர்களிடம் கேட்டு அவர்கள் விரும்பியதாலும், மக்கள் விரும்பியதாலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அன்று நீங்கள் சொன்னதை நான் கேட்டேன். இன்று நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கவே அளிக்காதீர்கள்.
ஊடகங்கள், லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டன. அதை தி.மு.க.வினர் குடும்ப தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை. மின்வெட்டு காரணமாக மக்கள் மரத்தடியில் காற்று வாங்கும் நிலை உருவாகி விட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டன. அழகிரி தற்போது அழுதகிரியாகி விட்டார். நான் மதுரையில்தான் தங்குகிறேன். உங்கள் ஆட்களை கூட்டிக் கொண்டு வாருங்கள். பார்த்துக் கொள்வோம். நான் மதுரைக்காரன்தான். அழகிரிதான் கரையான் புற்றுக்குள் புகுந்த கருநாகம் போல் மதுரைக்கு வந்துள்ளார். ஓட்டுக்கள் மூலம் அவர்களை அடித்து விரட்ட வேண்டும். காசு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஈவு இரக்கம் பார்க்காதீர்கள். 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார் கருணாநிதி. அதை கொடுத்திருந்தாலாவது காய்கறி பயிரிட்டு விலைகளாவது குறைந்திருக்கும்.
மக்களை ஏமாற்றி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கின்றனர். கருணாநிதிக்கு எப்போதுமே திருட்டு புத்திதான். அலிபாபா 40 திருடன் என்ற படத்தில் எம்.ஜி.ஆர். திருடர்களிடம் இருந்து கொள்ளையிட்டு ஏழை மக்களுக்கு உதவி செய்வார். ஆனால் கருணாநிதியோ, நானூறு திருடர்களுடன் (குடும்பத்தினர்) உள்ளார். அந்த 400 திருடர்களும் மக்களிடம் கொள்ளையிட்டு கருணாநிதிக்கு கொடுக்கின்றனர். தேர்தலில் தோல்வி பயம் காரணமாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என கருணாநிதி புலம்புகிறார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்தே ஆக வேண்டும். கருணாநிதி தனது குடும்பத்தினருக்கு மத்திய மந்திரி பதவி வாங்குவதற்காக அடிக்கடி டெல்லி சென்றார். தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவர் டெல்லி சென்றது உண்டா?
கருணாநிதி தமிழின காவலர் அல்ல. தமிழினத்தை அழித்தவர். தமிழகத்தில் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. கருணாநிதி மாறி மாறி பேசுகிறார். குற்றம் ஏதும் செய்யவில்லை என்றால் அழகிரி ஏன் முன் ஜாமீன் வாங்குகிறார். அ.தி.மு.க. கூட்டணியை பிரிக்கவும், காசு கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெறவும் கருணாநிதி அவரது மகன் அழகிரி நினைக்கின்றனர். அது நடக்காது. கலைஞரின் வீடா அல்லது தமிழ்நாடா என யோசித்து மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.