முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவில் வடசேரி சந்தையில் நள்ளிரவில் திடீர் தீ

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில், ஆக.22 - குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் கனகமூலம் சந்தை உள்ளது. ஓணப்பண்டிகையை யொட்டி இங்கு ஏராளமான காற்கறிகள், பழங்கள், புக்ைகள் என விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து இரவு நேரங்களிலும் லாரிகளில் காய்கறிகள் வந்த வண்ணம் இருந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு காற்கறி ஏற்றி வந்த லாரி சந்தைக்குள் நுழைந்த போது நுழைவு வாயில் அருகே இருந்த ஒரு கடையில் இருந்து புகை வருவதை லாரி டிரைவர் பார்த்தார். உடனே அவர் அருகில் இருந்தவர்களிடம் இதுபற்றி கூறினார்.

அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

அங்கிருந்து கோட்ட அதிகாரி செல்வராஜ், நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர். அப்போது சந்தையில் இருந்த ஒரு கடை கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பக்கத்து கடைகளுக்கும் பரவியது. 

கடைகளில் முன்பு போடப்பட்டிருந்த தார்ப்பாய்களும், தீயில் எரிந்து நாசமாகியது. இதில் அடுத்தடுத்த இருந்த 50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் தீ பரவியது. தீயின் வேகம் அதிகமானதால் கன்னியாகுமரி, குழித்துறை, தக்கலை, கொல்லங்கோடு, குளச்சல், பகுதிகளில் இருந்தும் 7 தீயணைப்பு வண்டிகளும் வள்ளியுர்ை, நாங்குநேரியில் இருந்து 2 வண்டிகளும் வரவழைக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் சேர்ந்து 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் சுமார் ரூ. 1கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். தீவிபத்து பற்றி தெரிவித்ததும் கலெக்டர் நாகராஜன், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ, நகரசபை தலைவி மீனாதேவ் மற்றும் அதிகாரிகள் வடசேரி சந்தைக்கு சென்று பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி.பாஸ்கரன், சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா அல்லது சந்தையில் தூங்கிய வியாபாரிகள் கொசுவுக்காக கொளுத்தி வைத்திருந்த கொசுவத்தி சுருள் சரிந்து விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்குமோ என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago