முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.22 - வெவ்வேறு விபத்துக்களில் காலமான 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பண்ணைக்காடு கிராமத்தில் 15.8.2012 அன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த என்.பஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  அந்தோணி என்பவரின் மகன் ஆப்ரகாம் மீது அரசு பேருந்து  மோதியதில் அவர்  படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்; மதுரை மாவட்டம், நக்கலம்பட்டி கிராமம், மதுரை-  தேனி தேசிய நெடுஞ்சாலையில் 16.8.2012 அன்று  இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த உசிலம்பட்டி வட்டம், மலைப்பட்டி  கிராமத்தைச் சேர்ந்த ராஜா  என்பவரின் மகன்  ஜெயக்குமார் படுகாயமடைந்து  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பனையூர் கிராமம், குடிமியான் தோப்பு கிழக்கு கடற்கரை சாலையில் 18.8.2012 அன்று நடந்து சென்று சென்று கொண்டிருந்த  நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிடைக்காணி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் மகாலிங்கம்  மீது அரசு பேருந்து மோதியதில்  அவர் படுகாயமடைந்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்  என்ற செய்தியையும்;  காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், புனித தோமையர் மலை மெட்ரோ ரெயில் பணியில் 19.8.2012 அன்று  ஈடுபட்டிருந்த  மங்கல் முண்டா என்பவரின் மகன் கங்காதரன் முன்டா மீது அரசு பேருந்து மோதியதில் அவர் பலத்த காயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து  நான் மிகவும்  துயரம் அடைந்தேன். இந்த சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த ஆப்ரகாம், ஜெயக்குமார்,  மகாலிங்கம் மற்றும் கங்காதரன் முன்டா   ஆகியோரின்  குடும்பங்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும்   தெரிவித்துக் கொள்கிறேன்.   இந்த துயர சம்பவங்களில் காலமான ஆப்ரகாம்,  ஜெயக்குமார்,  மகாலிங்கம் மற்றும்  கங்காதரன் முன்டா  ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா  ஒரு  லட்சம்  ரூபாய்   வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago