முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்-​2 விவகாரம்: முக்கிய குற்றவாளி தப்பி ஓட்டம்?

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.22 -​ குரூப்​2 வினாத்தாள் அவுட்டான விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பாலன் வெளிமாநிலத்துக்கு தப்பி ஓட்டம் பிடித்திருக்கலாம் என போலீசார் கூறினர். தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்​2 வினாத்தாள் அவுட்டான விவகாரத்தில் ஈரோட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாலன் என்பவன் வினாத்தாள் வெளியாக மூளையாக இருந்து செயல்பட்டது தெரிய வந்தது. 

தமிழகம் முழுவதும் பாலன் ஈ.மெயிலில் பலருக்கு டி.என்.பி.எஸ்.சி. கேள்வித்தாளை அனுப்பி விட்டான். இதற்காக பல லட்சம் அவன் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பாலனை பிடிக்க ஈரோடு தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர். இதை அறிந்த அவன் தப்பி சென்று விட்டான். ஆனால் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் அவனை பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து விட்டனர். பாலன் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. பாலனின் முகவரி, போட்டோ ஆகியவற்றினை கைப்பற்றியுள்ள போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போலீசார் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்த அவன் வெளிமாநிலத்துக்கு தப்பி சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இதையடுத்து போலீசார் வெளிமாநில போலீசாருடன் தொடர்பு கொண்டு பாலன் பற்றிய விபரங்களை தெரிவித்துள்ளனர். பாலனை பிடிக்க சென்னையில் ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா தலைமையில் போலீசார் முகாமிட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்