முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி வாகனங்களை முறைபடுத்த விதிமுறைகள் தயார்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.23 - பள்ளி வாகனங்களை முறைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 29-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

சேலையூர் சியோன் மெட்ரிக்குலேஷன் பள்ளி சிறுமி சுருதி, பள்ளி பேருந்து ஓட்டையின் வழியாக விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி இக்பால் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இந்த வழக்கை விசாரித்த முதல் டிவிஷன்  பெஞ்ச், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களை ஒழுங்குப்படுத்துவதற்கு கடுமையான சட்ட விதிகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர் வெங்கடேசன் ஆஜராகி, பள்ளி வாகனங்களை முறைப்படுத்துவதற்கு கடுமையான சட்ட விதிமுறைகளை வகுக்க அரசு கமிட்டி ஒன்றை அமைத்தது. அந்த கமிட்டி தயாரித்து வழங்கிய விதிமுறைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் முடிவுக்காக அந்த விதிமுறைகள் காத்திருக்கின்றன. எனவே, அந்த விதிமுறைகள் கொண்ட வரைவை கோர்ட்டில் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்