எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலூர், ஆக. 31 - மேலூர் பகுதியில் உள்ள சிந்து கிரானைட் நிறுவனத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்ட 150 கிலோ வெடி மருந்துகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு, கீழையூர், ரங்கசாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்ததன் அடிப்படையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் அதிகாரிகளை உள்ளடக்கிய 18 குழுக்கள் முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த குழுவினர் மேலூர் பகுதியில் உள்ள கீழவளவு, கீழையூர், ரங்கசாமிபுரம், திருவாதவூர், இடையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை அளவிடும் பணியும் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ராவின் உத்தரவுப்படி அதிகாரிகள் திருவாதவூர் பஞ்சபாண்டவர் மலை அருகே அமைந்துள்ள சிந்து கிரானைட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கழிவறை கட்டிடத்திற்குள் பாதுகாப்பின்றி 150 கிலோவுக்கு மேலாக வெடி பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். வெடிகுண்டு நிபுணர் சந்திரமுருகேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது முட்புதருக்குள் பாதுகாப்பின்றியும், ஆவணங்கள் இல்லாமலும் 150 கிலோ அமோனியம் நைட்ரேட், ஜெலட்டின் குச்சிகள், கார்டெக்ஸ் போன்ற சக்திவாய்ந்த வெடி பொருட்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை கைப்பற்றி அனைத்தையும் ஒரு தனி அறைக்குள் பூட்டி வைத்து சீல் வைத்தனர்.
இது குறித்து மேலூர் தாசில்தார் வசந்தா ஜூலியட் மேலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிந்து கிரானைட் மீது சட்டவிரோதமாக வெடி மருந்து பொருட்களை பதுக்கி வைத்திருத்தல், பொதுமக்களுக்கு உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில், வெடிபொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் நிருபர்களிடம் கூறிய போது, பாதுகாப்பில்லாமல் வைக்கப்பட்ட இந்த வெடி பொருட்கள் வெடித்திருந்தால் அந்த பகுதியில் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் மேலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான டீசல் பல்க் அருகிலேயே உள்ளதால் பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டனர். மேலும் இந்த பொருட்கள் தீவிரவாதிகளின் கையில் கிடைத்திருந்தால் மாவட்டமே பெரிய அளவில் சேதத்தை சந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் கலெக்டர் இங்கு வந்து ஆய்வு செய்த போது சிந்து கிரானைட்டுக்கு சொந்தமான கட்டிடம் முழுவதும் கட்டுக்கட்டாகவும், மூடை மூடையாகவும் ஆவணங்கள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை ஆய்வு செய்வதற்காக மேலூர் தாசில்தார் வசந்தா ஜூலியட் தலைமையில் ஒரு குழுவையும் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஏற்கனவே இந்நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் வெடி மருந்துகளும் கிலோ கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவரை உடனடியாக கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிடிபட்ட வெடி மருந்துகள் விபரம்:
1. அமோனியம் நைட்ரேட் ---- 150 கிலோ
2. கார்டெக்ஸ் ---- 45.750 மீட்டர்
3. ஜெல்பவுடர் ----- 719 கிலோ
4. ஜிபா பவுடர் ---- 30 கிலோ
5. சாதாரண டெட்டனேட்டர் --- 1,800
6. எலக்ட்ரிக் டெட்டனேட்டர் ----- 425
7. சிறிய பவர் சோர்ஸ் --- 1 மிஷின்
8. சேப்டி ப்யூஸ் --- 1098 மீட்டர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.