முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரையிறுதி வாய்ப்பை இழந்தது ஏன்? தோனி சொல்கிறார்

வியாழக்கிழமை, 4 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, அக். 4 - 20 ஓவர் போட்டியில் நடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வென்றும் பலனில்லாமல் போய் விட்டது. இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 19.5 ஓவரில் 151 ரன் எடுத்து ஆல்அவுட்டானது. இதனால் இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது. யுவராஜ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இருந்த போதிலும் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா,பாகிஸ்தான் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதற்கு அடுத்து இருந்த இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இது குறித்து கேப்டன் தோனி கூறுகையில், இந்திய வீரர்களின் ஆட்டம் இந்த தொடரில் திருப்தி அளிக்கிறது என்றாலும் அரையிறுதி வாய்ப்பை பெற முடியாமல் போனது ஏமாற்றமே. சூப்பர் 8 சுற்றில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும்தான் தோற்றோம். ஆஸ்திரேலியாவுடன் ஆடிய ஆட்டத்தில் மோசமாக தோற்றதே இதற்கு காரணமாகும். 

பலமான அணிகளுக்கு இடையே மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது கடினமே. சில அவசர முடிவுகள் தோல்விக்கு காரணமில்லை என்றார் தோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்