முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை அரை இறுதி: இலங்கை பாக்.,கை வீழ்த்தியது

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஆக. 6 - டி - 20 உலகக் கோப்பை போட்டியில் கொழும்பு நகரில் நடைபெற்ற முதல் அரை இறுதியில் இலங்கை அணி பரப ரப்பான ஆட்டத்தில் 16 ரன் வித்தியாச த்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், கேப்டன் ஜெயவர்த்தனே அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக் குப் பக்கபலமாக தில்ஷான், சங்கக்க ரா, ஜீவன் மென்டிஸ், பெரீரா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, சுழற் பந் து வீச்சாளர்களான ஹெராத், அஜந் தா மென்டிஸ் மற்றும் மேத்யூஸ் ஆகி யோர் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

ஐ.சி.சி. சார்பிலான உலகக் கோப்பை போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டம் கொழும்பு நகரில் உள்ள பிரேம தாசா அரங்கத்தில் நடைபெற்றது. இதி ல் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. 

முன்னதாக டாசில் வெற்றி பெற்ற இல ங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் முதலில் களம் இறங்கிய அந்த அணி ரன் எடுக்க திணறியது. 

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்க ப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பி ற்கு 139 ரன் எடுத்தது. கேப்டன் ஜெயவ ர்த்தனே பொறுப்புடன் ஆடி 36 பந்தில் 42 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். 

அவருக்குப் பக்கபலமாக ஆடிய தில் ஷான் 43 பந்தில் 35 ரன் எடுத்தார். இதி ல் 3 பவுண்டரி அடக்கம். தவிர, சங்கக்க ரா 18 ரன்னையும் ஜீவன் மென்டிஸ் 15 ரன்னையும், சி. பெரீரா 11 ரன்னையும், மேத்யூஸ் 10 ரன்னையும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஹபீஸ் 12 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, உமர் குல், சயீத் அஜ்மல் மற்றும் சாகித் அப்ரிடி ஆகி யோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி 140 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இலங்கை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன் னை எடுத்தது. 

இதனால் இந்த முதல் அரை இறுதியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன் னேறியது. பாக். அணி இந்தப் போட்டி யில் போராடிய போதிலும்  வெற்றி பெற முடியவில்லை. 

பாக். அணி தரப்பில், கேப்டன் மொக மது ஹபீஸ் அதிகபட்சமாக, 40 பந்தில் 42 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, உமக் அக்மல் 22 பந்தில் 29 ரன்னையும், இம் ரான் நசீர் 20 ரன்னையும், எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில் ஹெராத் 25 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். தவிர, மேத்யூஸ் மற்றும் மென்டி ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜெய வர்த்தனே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்