எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக.16 - எம்.ஜி.ஆர். சமாதியின் நினைவிடத்தின் நுழைவு வாயிலில் இரண்டு தூண்களின் மத்தியில் வெண்கல குதிரை பறப்பது போல் அமைத்தது இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாமக்கல் மாவட்டம், வென்னந்தூரை சேர்ந்த வக்கீல் ஏ.ஜி.நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அமைந்துள்ள நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் ரூ.3.4 கோடி திட்டத்தின் அடிப்படையில் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. எம்.ஜி.ஆர். சமாதி நினைவிடத்தில் புதிதாக 15.9 மீட்டர் உயரத்தில் இரண்டு நினைவு தூண்களும், சிறகை கொண்ட இரண்டு குதிரைகள் பறப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மக்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழ்நாட்டின் மக்கள் அனைவராலும் கட்சி பாகுபாடின்றி ஏற்றுக்கொண்ட தலைவர். அவரது நினைவிடத்தில் அவர் உருவாக்கிய கட்சி சின்னத்தை குறிப்பது தேவையற்றது. இதன் அருகிலேயே அறிஞர் அண்ணா சமாதி உள்ளது. இவரது நினைவிடத்தில் இவரால் உருவாக்கப்பட்ட சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்டபோது எதிர்ப்பு கிளம்பியதால் அந்த சின்னம் நீக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சமாதியில் அவரது கட்சி சின்னம் இரட்டை இலை பொறிக்கப்படுவதால் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்பட்டால் அறிஞர் அண்ணா நினைவிடத்தில் அவரது கட்சி சின்னத்தை பொறிப்பார்கள். அந்த சூழ்நிலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் அரசு பணத்தில் எம்.ஜி.ஆர். சமாதியை சீரமைப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் பானுமதி மற்றும் சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ் ஆஜராகி மனுதாரர் குறிப்பிடுவதுபோல இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். சமாதி வாயிலில்அமைக்கப்படவில்லை. வெற்றியின் சின்னமான `வி' (சு) என்ற சொல்லை பிரதிபலிப்பதாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மனுதாரர் தி.மு.க. கட்சியின் உறுப்பினர் ஆவார். கட்சியின் தலைமையில் நற்பெயர் வாங்குவதற்காகத்தான் இந்த மனு தாக்கல் செய்துள்ளார். கட்சியின் தேர்தல் சின்னம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அறிஞர் அண்ணாவின் சமாதியில் உதயசூரியன் சின்னத்தை நீக்கியதாகவும், ஆனால் அதன் பின்பு வந்த ஆட்சியாளர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட மின் கம்பங்களின் உச்சியில் உதயசூரியன் பிரதிபலிப்பது போல் உள்ளது என்று குற்றம் சாட்டினார். ஏற்கனவே, இதுபோன்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த வழக்கின் மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் மனுதாரரை நோக்கி நீங்கள் கட்சியை சேர்ந்தவரா என்று கேள்வி எழுப்பினார். மனுதாரர் இல்லை என்று மறுத்ததையடுத்து, நீங்கள் கட்சியை சார்ந்தவர் என்று அரசு தரப்பில் நிரூபித்தால் உங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றார். நீங்கள் கட்சிக்காரர்கள் இல்லை என்று மறுத்தால் பதில் மனு தாக்கல் செய்யுங்கள். இல்லையெனில் இந்த மனுவை வாபஸ் பெறுங்கள் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதன்பிறகு மனுதாரர் அவர் தொடர்ந்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் இன்பதுரை ஆஜரானார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.