எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.12 - ஜனநாயகத்தை காக்க, தொழில்துறை விவசாயம், கல்வியியல் முன்னேற்றம் காண, மாநில உரிமைகளை நிலைநாட்ட, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, மகளிர் மேம்பாடு, மீனவ மக்களின் துன்பங்கள் தீர, 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு நீதி கிடைக்க, முன்னேற்ற பாதையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ அ.தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு வாக்களித்து பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென தமிழக வாக்காளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்!
எனது அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.
தமிழ் நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் என்றைக்கு வரும் என்று மிகுந்த ஆவலோடும், எதிர்பார்ப்போடும் தமிழர்கள் காத்துக் கொண்டிருந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாள், ஏப்ரல் 13ஆம் தேதி என்பதை உங்கள் அனைவரின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
என்றைக்கு வாக்குப் பதிவு நாள் வருமோ? என்ற ஆவல் தமிழக மக்களாகிய உங்களிடம் மேலோங்கி இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. கடுமையான விலைவாசி உயர்வு. ஏழை, எளிய மக்கள் மட்டுமல்லாமல், நிரந்தரமான மாத சம்பளம் பெறுபவர்கள் கூட நிறைவான வாழ்வு வாழ முடியாத வண்ணம் எல்லா வகையான செலவுகளும் பலமடங்கு உயர்ந்துவிட்டன. சட்டம்ஒழுங்கு நிலை குறித்து தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள்; கவலைப்படுகிறார்கள். `தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் இப்படி கொள்ளை போகின்றனவே? இதற்கு ஒரு முடிவு வராதா? அமைதியான வாழ்க்கை என்றைக்கு அமையுமோ?' என்ற ஏக்கம் தமிழக மக்கள் அனைவர் நெஞ்சிலும் ஏற்பட்டுவிட்டது.
உலக அரங்கில் நம் நாட்டுக்கே தலை குனிவை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் குறித்த புதுப் புது செய்திகள் உச்ச nullநீதிமன்றத்தில் இருந்தும், பல்வேறு அரசு அமைப்புகளிடமிருந்தும் வருவதை ஒவ்வொரு நாளும் படித்து இதற்கெல்லாம் நீnullதி சொல்லும் நாள் என்றைக்கு வருமோ என்று எல்லோரும் காத்திருந்தார்கள்.
அந்த நாள் தான் ஏப்ரல் 13ஆம் தேதி. ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் வாக்குகள் வழியாக சொல்லும் தீர்ப்பு தான், மற்ற தீர்ப்புகளுக்கெல்லாம் முன்னோடியான தீர்ப்பு. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆட்சி நடத்தும் ஆற்றல் அ.தி.மு.க.வுக்குத் தான் உண்டு என்று தமிழக வாக்காளர்கள் அனைவரும் உறுதிபட நம்புகிறார்கள்.
கடந்த 19 நாட்களாக தமிழகத்தில் நான் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரப் பயணத்தில், மிகுந்த எழுச்சியோடும், நம்பிக்கையோடும் மக்கள் அளித்த வரவேற்பை பார்த்த போது, தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி புதிய வரலாறு படைக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை கண்கூடாகக் கண்டேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போதெல்லாம் தமிழ் நாட்டில் ஏழை, எளிய மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். தொழில் துறை மின் தட்டுப்பாடு இன்றியும், ஆளும் கட்சியினரின் அராஜக தொல்லைகள் இல்லாமலும் நிம்மதியாக வளர்ந்து வந்தது. அத்தகைய பொற்கால ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும் என்றால், அ.தி.மு.க. உடன்பிறப்புகள் கட்டுப்பாடோடு தேர்தல் பணியாற்றி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். அ.தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சிகளும், எல்லா தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 86 லட்சம் விவசாய குடும்பங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்த பெருமை அ.தி.மு.க. ஆட்சிக்கு உண்டு. அத்தகைய நிம்மதியான வாழ்வு தமிழக விவசாயிகளுக்கு மீண்டும் அமைய அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வருவது மிகவும் அவசியமானது. எனவே தான், தேர்தல் நாளில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் சின்னங்களுக்கும் மறவாமல் வாக்களித்து, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி முழுமையான வெற்றி பெற ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்வது அவசியம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே, ஒற்றுமை உணர்வுடன், எந்தவிதமான பிணக்குகளுக்கும் இடமின்றி, எல்லாவற்றையும் விட எனக்கு என் நாடு பெரிது ; சுவரை வைத்துத் தானே சித்திரம் வரைய முடியும் ; எனவே, எனது நாடு நன்றாக இருந்தால் தான், நான் நன்றாக இருக்க முடியும் என்ற பறந்த மனதுடன் ஜனநாயகக் கடமையாற்ற, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இத்தனை நாள் ஏங்கிக் காத்திருந்த வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 13ஆம் தேதி காலையிலேயே nullநீங்கள் ஒவ்வொருவரும் குடும்பம் குடும்பமாகச் சென்று உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள். உங்கள் உறவினர்களும், நண்பர்களும் ஓட்டளிக்க அவர்களுக்கு உற்சாகம் ஊட்டுங்கள். தேவையான ஆவணங்களுடன் சென்று கால தாமதத்திற்கு இடமின்றி வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படும் விதத்தை நன்கு புரிந்துகொண்டு உங்கள் வாக்குகளை உறுதியாக பதிவு செய்யுங்கள்.
அதன் மூலம் தான் கள்ள ஓட்டுகளையும், மோசடி வாக்குப் பதிவுகளையும் தவிர்க்க முடியும். எனவே, ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், தொழில் துறையிலும், விவசாயத்திலும், கல்வியிலும், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும், சட்டம்ஒழுங்கு பராமரிப்பிலும், மகளிர் மேம்பாட்டிலும், முன்னேற்றப் பாதையில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியமைக்கவும், மீனவ மக்கள் கடந்த ஐந்தாண்டுகளாக சந்தித்து வந்த தொல்லைகள் நீங்கவும், இந்தத் தேர்தல் நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு என்பதை நினைவில் கொண்டு வாக்களியுங்கள்.
நேர்மையான, தூய்மையான, ஊழலற்ற, ஜனநாயக தத்துவங்கள் மேலோங்கிய உண்மையான மக்களாட்சி அமைவது, நீnullங்கள் அளிக்கப் போகும் வாக்குகளில் தான் உள்ளது என்பதை உளப்nullர்வமாக உணர்ந்து ஜனநாயகக் கடமை ஆற்றுங்கள் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.