எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி: அக், -30 - சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடர்களில் ஆடி வந்த கங்குலி தற்போது, அதிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் அவரது கிரிக்கெட் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி(40). மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எதிரணியை மிரட்டும் துவக்க வீரராக வலம் வந்தவர். சச்சினுடன் ஜோடி சேர்ந்து பல சாதனைகளை படைத்துள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான இவரது சிறப்பான ஆட்டத்தை கண்டு, மஹாராஜா, தாதா, பிரின்ஸ் ஆப் ஆப் சைட் போன்ற பல பட்ட பெயர்களை பெற்றார். கடந்த 1992ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமான கங்குலி, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் கேப்டன் பதவி வரை உயர்ந்தார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 3வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தவர். 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கங்குலி 16 சதங்கள், 35 அரைசதங்கள் அடித்து மொத்தம் 7,212 ரன்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 239 ரன்களை எடுத்து, சராசரியாக 52.53 ரன்கள் வைத்துள்ளார். அதேபோல 311 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கங்குலி, 22 சதங்களும், 72 அரைசதங்களும் அடித்து மொத்தம் 11,363 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 183 ரன்கள் அதிகபட்சமாகவும், சராசரியாக 41.02 ரன்களும் எடுத்துள்ளார்.
சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் அவ்வப்போது அணிக்கு கை கொடுப்பார். தனது மிதவேகப்பந்துவீச்சின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கங்குலி, உள்ள?ர் போட்டிகளை கொண்ட ஐபிஎல் தொடரில் பங்கேற்க துவங்கினார். துவக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கங்குலி 3 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த அணியில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டார்.
அப்போது கங்குலிக்கு, புனே வாரியர்ஸ் அணி கை கொடுத்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் சிகிச்சை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் புனே வாரியர்ஸ் அணியை கங்குலி கேப்டனாக செயல்பட்டு வழிநடத்தினார். ஆனால் ஐபிஎல் தொடரில் அந்த அணி படுதோல்வி அடைந்தது.
இதிலும் மனம் தளராத கங்குலி, அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் ஆட போவதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது தனது முடிவை மாற்றி கொண்டுள்ள கங்குலி, ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஐபிஎல் தொடரில் கடந்த 5 ஆண்டுகளாக நான் ஆடியதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பிறகும், தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாட முடிந்தது. ஆனால் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க நான் விரும்பவில்லை. என்னை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக தேர்வு செய்ய வேண்டாம்.
இந்திய அணிக்காக இனி விளையாட முடியாது என்பதை அறிந்த பிறகு, முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவதை கடினமாக உணருகிறேன். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடும் போது, எனக்கு 41 வயது கடந்திருக்கும். இந்த நிலையில் அதிக எதிர்பார்ப்பு கொண்ட ஐபிஎல் தொடரில் என்னால் சிறப்பாக ஆட முடியாது. ஐபிஎல் தொடர்களில் எந்த பயிற்சியும் இல்லாமல் ஆட முடியாது என்பதால் தான் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்தேன் என்றார்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 59 போட்டிகளில் ஆடியுள்ள கங்குலி 25.46 ரன்களை சராசரியாக கொண்டுள்ளார். ஸ்டிரைக் ரேட் 106.80 ரன்களை வைத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
29 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.