முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் டெண்டுல்கருக்கு எதிரான மனுதள்ளுபடி

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக். - 31 - கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி.யாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டுகளில் நடைபெறும் வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சச்சின் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி மற்றும் அலகாபாத் ஐகோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக் கோரி டெல்லி முன்னாள் எம்.எல்.ஏ. ராம் கோபால்சிங் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அடிப்படை முகாந்திரமின்றி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இதனை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்