எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, ஏப்.13 - புதுவையில் காவல்துறை முன்னிலையில் காங்கிரஸ்-தி.மு.க.வினர் மதுபானம், பணம் பட்டுவாடா படுஜோராக நடைபெறுகிறது. இதை கண்டும் காணாமல் புதுச்சேரி தேர்தல் துறை உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் இயங்குகிறதா-இல்லையா? என்று சந்தேகிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர்.
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை(இன்று) நடைபெற இருக்கும் புதுச்சேரி மாநில பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிக பட்ச இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து ஆளும் கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. ஒருதலைப்பட்சமாக அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
காவல்துறையினரிடம் பலமுறை முறையிட்டும், தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. ஆதாரத்துடன் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ஆளும் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்கின்றனர். இதனை அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். புதுவையில் தேர்தல் ஆணையம் இயங்குகிறதா-இல்லையா? என்று சந்தேகிக்கும் நிலை உள்ளது.
தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உப்பளம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கென்னடி மற்றும் முதலியார்பேட்டையில் கழக வேட்பாளர் பாஸ்கரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் பிரச்சார நேரம் முடிந்த பிறகும் தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக என்னையும்(அன்பழகன்), கழக வேட்பாளர் பாஸ்கரை பற்றியும் அவதூறாக, இட்டு கட்டி பேசி துண்டு பிரசுரங்களை வீடுதோறும் கொடுத்து வருகிறார்கள்.
இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. இதனால் சட்டம்-ஒழுங்கு கெடும் சூழல் உள்ளது. நேற்று(11-ந் தேதி) மாலையுடன் பிரச்சாரம் முடிந்த பிறகும் தி.மு.க.வை சேர்ந்த யூ.சி.ஆறுமுகம் தலைமையில் உப்பளம் தொகுதியில் வீடு வீடாக பொய்யான தகவல்களுடன் துண்டு பிரசுரங்களை வினியோகித்து, பணப்பட்டுவாடாவும் செய்துள்ளனர். எங்கள் வீட்டின் எதிரே உள்ள வீட்டில் வினியோகம் செய்தனர். இதை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. உறுப்பினர் போசை நடுரோட்டில் தி.மு.க. காலிகள் அடித்துள்ளனர்.
இதை கேள்வி பட்ட நான் அங்கு சென்று அ.தி.மு.க. உறுப்பினரை அழைத்து வந்து விட்டேன். இது சம்பந்தமாக தி.மு.க.வை சேர்ந்த யூ.சி. ஆறுமுகம் கொடுத்த பொய்யான புகாரில், முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் எந்த விசாரணையும் செய்யாமல் என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை ஆளும் கட்சிக்கும், அதற்கு ஆதரவு கொடுக்கும் தி.மு.க.விற்கும் ஆதரவாக செயல்பட்டு எதிர்க்கட்சிகள் மீது எந்த வித விசாரணையும் செய்யாமல் பொய் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி தோல்வி பயத்தில் மக்களிடம் தொடர்ந்து, மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் தான் மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற முடியும் என்று மிரட்டி வருகிறார். புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி 6 சதவீதம் தான். ஆனால் மற்ற மாநிலங்களில் 9 சதவீதம். மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் அரசு புத்தகம் எல்லாம் இலவசமாக கொடுத்து விட்டோம். பிள்ளை மட்டும்தான் கொடுக்கவில்லை என்று மக்களை இழிவாக பேசியுள்ளார். அவர் மத்திய அமைச்சராக இருக்க அருகதையே இல்லாதவர்.
நாராயணசாமி தேர்தல் முடிந்த பிறகு மக்களை சந்திக்கட்டும். அவர்கள் அவருக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். புதுவையில் பல இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் வேட்பாளர்களும் ஒரு வீட்டிற்கு ரூ.2000 என பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோல ஏம்பலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி ஒரு ஓட்டிற்கு ரூ.1000 தந்து ஓட்டை விலைக்கு வாங்கியுள்ளார். காலாப்பட்டு தொகுதியில் ஷாஜகான் ரூ.1000 தந்துள்ளார். இவர்கள் தான் இப்படி என்றால் காமராஜர் நகர் தொகுதியில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான வைத்திலிங்கம் ஒரு ஓட்டிற்கு ரூ.1000 என விலை பேசியுள்ளார். இவர்களோடு ஒப்பிடுகையில் தி.மு.க.வினரும் சளைத்தவர்களில்லை. அவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஒரு ஓட்டுக்கு ரூ.500 தந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் குவார்ட்டர், மதுபானம், பிரியாணி ஆகியவை புதுவையில் தங்கு தடையின்றி கொடுக்கப்பட்டு வருகிறது.
இங்கு தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லையா? என்றே தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.