முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடுவேன் - சேவாக் நம்பிக்கை

புதன்கிழமை, 7 நவம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. - 7 - இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ் ட் தொடரில் சிறப்பாக ஆடுவேன் என் று இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான வீரேந்தர் சேவாக் நம்பிக்கை தெரிவித்தார். 

ரஞ்சிக் கோப்பை போட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி அணியும், உத்தரபிரதேச அணியும் மோதின. இதில் உ.பி. அணி இறுதியில் வெற்றி பெற்றது.  டெல்லி அணி தோல்வி அடைந்த போதிலும், அந்த அணி சார்பில் பங்கு கொண்ட சேவாக் சதம் அடித்தார். இது அவருக்கு புத்துணர்வை அளித்துள்ளது.  தலைநகர் டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த சேவாக் அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.  இது குறித்து அவரிடம் கேட்ட போது, ரஞ்சிக் கோப்பை போட்டியில் டெல் லி அணி தரப்பில் நன்றாக ஆடி சதம் அடித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை டெஸ்ட் தொடரிலும் தொட ருவேன்  என்றார் அவர். இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ் டார் குக் தலைமையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கேப்டன் தோ னி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இரண்டு 20 -க்கு 20  போட்டி மற்றும் 5 போட்டிகள் கொ  ண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது.  இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் வரும் 15 -ம்  தேதி முதல் 19 -ம் தேதி வரை நடக்க இருக்கிறது.  இதனைத் தொடர்ந்து 2-வது போட்டி மும்பையிலும், 3-வது போட்டி கொல் கத்தாவிலும், 4-வது போட்டி நாக்பூரி லும்  நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

மேலும், இங்கிலாந்து அணி ஒரு சிறந்த அணியாகும். அதே போல இந்திய அணியும் ஒரு சிறந்த அணியாகும். இந் தத் தொடருக்காக இரு அணிகளும் நன்றாக ஆயத்தமாகி உள்ளன. இங்கிலாந் து அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத் தை வெளிப்படுத்துவோம். இந்தத் தொடர் மிகக் கடுமையாக இருக்கும். இதற்காக நாங்கள் ஆவலாக காத்திருக் கிறோம் என்றும் அவர் கூறினார். 

கடந்த வருடம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி மோசமாக ஆடி 0 - 4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. 

எனவே இந்தத் தொடர் பழிவாங்கும் வகையில் இருக்குமா என்று அவரிடம் கேட்ட போது, டெல்லி துவக்க வீர ரான சேவாக் இதற்கு மறுப்பு தெரிவித் தார். 

இந்தத் தொடரில் இந்திய அணி இங்கி லாந்தை பழிவாங்கும் என்பதெல்லாம் மீடியாக்கள் செய்யும் வேலையாகும். ஆனால் நாங்கள் இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வெற்றி பெற முயற்சிப் ேபாம். வெற்றி தான் அணிக்கு முக்கியம் என்றார் அவர். 

இந்தியஅணியில் சேவாக் மற்றும் காம் பீர் இருவரும் ஆட்டத்தை துவக்க உள்ளனர். இவர்கள் மீது தேர்வுக் குழுவினர் நம்பிக்கை வைத்து உள்ளனர். 

மற்றொரு துவக்க வீரரான கெளதம் காம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன் றில் இந்தியாவைப் பொறுத்தவரை நாங்கள் தான் சிறந்த துவக்க ஜோடி என்றார் அவர். 

காம்பீரின் இந்த பேட்டி குறித்து டெல் லி வீரரான சேவாக்கிடம் கேட்ட போ து, ஆமாம். நாங்கள் தான் சிறந்த ஜோ டி என்று பதில் அளித்தார் அவர். --------------------------------------   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்