முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு மடிக்கணினிகள்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.25 - தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா 22.11.2012 அன்று தலைமைச் செயலகத்தில், வலைதள ரத்த வங்கி மேலாண்மை முறையை  மேம்படுத்தும் வகையில்,  5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 மடிக்கணினிகளையும், 25 இணையதள இணைப்பான்களையும் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

தன்னார்வ ரத்த தானக் கொடை திட்டத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.  தரமான மற்றும் பாதுகாப்பான  ரத்தம்  மற்றும் ரத்தக் கூறுகள், தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடியாக சென்றடைவதை இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.  தமிழகத்தில் 85 அரசு ரத்த வங்கிகள், 180 தன்னார்வ தனியார் ரத்த வங்கிகள் 9 மத்திய / மாநில நிறுவன ரத்த வங்கிகள், என மொத்தம் 274  அரசு அங்கீகாரம் பெற்ற ரத்த வங்கிகள் இயங்கி வருகின்றன. தமிழகம், கடந்த ஆண்டில் 7.11  லட்சம்  ரத்த அலகுகளை தன்னார்வ ரத்தக் கொடை திட்டத்தின் மூலம் சேகரித்துள்ளது.    மேற்கண்ட ரத்த வங்கிகள் மட்டுமல்லாமல், 196 அரசு மற்றும் 

57 தனியார், என மொத்தம் 253 ரத்த சேமிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  இவைகள் அனைத்தும் ரத்தத்தை பாதுகாக்கவும் சேமித்து வைத்து நோயாளிகளின் அவசரகால ரத்த தேவைகளை  nullர்த்தி செய்யவும் அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளது.  

அரசு ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் சூசூசூ.சிடூகிச்சுஸங்ச்ச்க்ஷஸஹடூகூ.டுடூஎன்ற வலைதளத்தின் மூலம்  கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வலைதளம் தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள் தங்கள் கொடை விருப்பத்தை பதிவு செய்வதற்கு  வழிவகை செய்துள்ளது.  

மேலும், இவ்வலைதளத்தில் உள்ள தன்னார்வ ரத்தக் கொடையாளர்  விவரங்கள் அரசு ரத்த வங்கிகளின் அவசரகால ரத்த தேவையை  nullர்த்தி செய்வதற்கு உதவியாக உள்ளது.   இந்த  வலைதளம் அரசு ரத்த வங்கிகளின் ரத்த இருப்பு, ரத்த தான முகாம் நடைபெறும்  நாள், மற்றும் இடம் பற்றிய விவரம்,  ரத்த தான முகாம் அமைப்பாளர்களின் தொலைபேசி எண் போன்றவைகளை அனைவரும் அறியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

வலைதள ரத்த வங்கி மேலாண்மை முறையை  மேம்படுத்தும் வகையில்,  தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 25 மடிகணினிகளையும், 

25 இணையதள இணைப்பான்களையும் அரசு மருத்துவக் கல்லுரி  மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக 22.11.2012 அன்று தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  வழங்கினார். 

இந்நிகழ்வின்போது,  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்