முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.சுப்புராம் சாலை விபத்தில் மரணம் முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 26 - விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி பா.சுப்புராம் மரணமடைந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு 19​ஆவது வார்டு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான அன்புச் சகோதரர் பா. சுப்புராம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான மாயூர்நாதபுரத்திற்கு வாகனம் மூலம் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனத் துயரம் அடைந்தேன். கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என்று நான் அடிக்கடி வலியுறுத்தி வந்த போதிலும் இது போன்ற விரும்பத் தகாத நிகழ்வுகள் நடைபெற்று, என் உயிரினும் மேலான விலை மதிக்க முடியாத எனதருமைக் கழக உடன்பிறப்புகள் உயிரிழப்பது மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது. கழக உடன்பிறப்புகள் இனிவரும் காலங்களில் மிகுந்த கவனத்துடன் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்று மீண்டும் நான் அன்புக் கட்டளை இடுகிறேன். சாலை விபத்தில் அகால மரணமடைந்த சுப்புராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்