எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சை. டிச.8 - தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நடந்த முழு கடையடைப்பு மாபெரும் வெற்றி பெற்றது. ரயில் மறியல், சாலை மறியலில் ஈடுப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன.
நடந்தாய் வாழி காவேரி என பாடிய வைர வரிகள் நேற்று தவழ்நேதாய் வாழி கவேரி என கூறும் அளவிற்கு கூட தண்ணீர் வராத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தார்மீக உரிமையைக்கூட பெறமுடியாத அவல நிலையில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை முறையாக கர்நாடகம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்த தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடகம் அடாவடித்தனத்தை கையாண்டு வருகிறது. கர்நாடகத்தின் முரட்டு பிடிவாதத்தால் காவிரி டெல்டா விவசாயம் முற்றிலும் அழிந்துபோய் உள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தை கண்டிக்கும் வகையில் முழுஅடைப்பிற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அந்த அழைப்பை ஏற்று தஞ்சை மாவட்டம் முழுவதும் கடைகள், நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
தஞ்சை நகரில் காந்திஜிரோடு, ரயிலடி, அண்ணாசாலை, கீழவாசல், அய்யங்கடைத்தெரு, மருத்துரக்கல்லூரி சாலை, கரந்தை போன்ற நகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஆதரவு தந்தனர்.
தஞ்சை ரயிலடியில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்க தலைவருமான பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் தலைமையில் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், செற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், அபிமன்னன், கரிகாலன், இந்திய கம்யூனிஸ்ட் விவசாய சங்க தலைவர் இராமநாதன், திருப்பதி, அர்ச்சுணன், கோவிந்தராஜ், புண்ணியமூர்த்தி உட்பட நூற்றுக்கணக்கானோர் கைதானார்கள்.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் திருஞானம், காக்கரை சுகுமார், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் நாஞ்சி வரதராஜன் உட்பட நூற்றுக்கணக்கானோர் சாலைமறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.
அதேபோல் திருவையாறில் மாவட்ட குழு உறுப்பினர் ராமு, வட்டாரசெயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் சாலைமறியல் செய்தனர். 41 பேர் கைதானார்கள், நடுக்காவேரியில் அம்பலராஜ், மூக்கையன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டு 22 பேர் கைதானார்கள்.
வரகூர் சாலையில் ராமலிங்கம் தலைமையில் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ஜீவக்குமார் உள்ளிட்ட 21பேர் சாலை மறியல் செய்து கைதானார்கள்.
பாபநாசத்தில் காதர்உசேன், சாமுதர்மராஜ், ஜெயபால் ஆகியோர் தலைமையில் ரயில் மறியல் செய்து 200 பேர் கைதானார்கள், அய்யம்பேட்டையில் முருகேசன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 60பேர் கைதானார்கள்.
அம்மாப்பேட்டை அடுத்துள்ள ராமுத்திரைக்கோட்டையில் பக்கிரிசாமி தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டு விவசாய தொழிலாளர்கள் 180 பேர் கைதானார்கள், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள் பந்த் முழு வெற்றிபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்ண்டியில் அரசு மற்றும் தயார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. பள்ளி வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்க வில்லை. கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. உலகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கல் முழுமையாக பங்கேற்றுள்ளனர் என்று விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. கிராமப்புறங்களில் முழுமையாக கடையடைப்பு நடந்தது.
மாரிமுத்து எம்.எல்.ஏ தலைமையில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. மன்னார்குடியில் விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாதன், முன்னாள் எம்.எல்.ஏ சிவபுண்ணியம், முன்னாள் சேர்மன் பாண்டியன் தலைமையில் மயிலாடுதுறை செல்லும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு, விவசாயிகள் சங்க மன்றம், வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்கெனவே அறிவித்தப்படி நேற்று நீடாமங்கலத்தில் ரயில் மறியல், பெரியார்சிலை, அண்ணா சிலை ஆகிய இடங்களில் சாலை மறியல் செய்தனர். நேற்று காலை 9.40 மணிக்கு யர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை நாம் தமிழர்கள் கட்சியின் அமைப்பாளர் பாரதி செல்வன் தலைமையில் மறித்தனர். இதில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்று காலை 8.45 மணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழர்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு கலியபெருமாள், தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், விவசாயிகள் மன்றம் செயலாளர் சுந்தரம் ஆகியோர் தலைமையில் பஸ் மறியல் 1.45 மணி வரை 5 மணி நேரம் நடைபெற்றது. 12 மணிக்கு வரவேண்டிய திருச்சி நாகூர் பயணிகள் ரயில் 12.50க்கு வந்தது. அதையும் மறித்தனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க பொது செயலாளர் காவிரி ரெங்கநாதன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நீடாமங்கலத்தில் தாசில்தார் பானுமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டாமங்கலம், கூத்தாநல்லூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.