முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமதமாக தண்ணீர் திறப்பு: சு.,கோர்ட்டில் கர்நாடகா வருத்தம்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 8 - தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட கோர்ட் உத்தரவிட்ட பிறகும் ஒரு நாள் தாமதமாக காவிரி நீரைத் திறந்து விட்டதற்கு சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வருத்தம் தெரிவித்திருக்கிறது.

காவிரி நதிநீர் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது, கர்நாடகா ஒரு நாள் தாமதமாக காவிரி நீரை திறந்து விட்டதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தாமதமாக நீர் திறந்து விட்டதற்கு கர்நாடக அரசு தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக் கிழமை வரை தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் தாமதமாக நீர் திறந்ததால் ஒரு நாள் கூடுதலாக அதாவது திங்கள்கிழமை வரை தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதாக கர்நாடகம் உறுதி அளித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்