முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஆர். பழனிச்சாமிக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

மேலூர், டிச. 8 - மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கிரானைட் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கும்  கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமியை 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற காவல் அவருக்கு நேற்றுடன் முடிவடைவதால் பழனிச்சாமியை போலீசார் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி ஜெய்குமார் வருகிற 21.12.2012 வரை நீதிமன்ற காவலில் பழனிச்சாமியை வைக்கும்படி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் பழனிச்சாமியை நீதிபதியின் உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு சென்றனர். 

இவர் மீது ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் போடப்பட்டிருந்த 2 வழக்குகளில் இவரை குற்றவாளியாக சேர்க்க ஒத்தக்கடை போலீசார் மேலூர் நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதன் மீதான விசாரணையும் நேற்று நடந்தது. 

அதற்கு பி.ஆர்.பி. தரப்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல் நாகராஜன், ஒத்தக்கடை போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகள் மீது முன் ஜாமீன் கேட்டு நாங்கள் மதுரை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த வழக்குகளுக்கு பிடிவாரண்ட் தரக்கூடாது என்று வாதாடினார். அவரின் வாதத்தை கேட்டறிந்த நீதிபதி போலீசார் கொடுத்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago