எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.9 - காவிரி நீர் பிரச்னையில், கர்நாடகா அணைகளில் வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீர் நீதிறக்கவும், கண்காணிப்பு குழு கூட்டவும் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவு, தமிழகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்
காவிரி நீர் பிரச்னையில் கர்நாடகா மாநிலத்துக்கு எதிராக, முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல், முறையீடு செய்தது தவறு. இதனால், மாநிலங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது உள்பட பல்வேறுவிதமான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
ஆனால், பல்வேறு விமர்சனங்களுக்கு இடையேயும் தளராமல், தமிழக முதல்வர் நீதிமன்றத்தை அணுகி, சட்ட போராட்டம் நடத்தினார். கர்நாடகா மாநில அரசு, தமிழகத்துக்கு உரிய பங்களிப்பு காவிரி நீரை வழங்க வேண்டும் என, முதலில் முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம்கோர்ட்டைஅணுகினார். இதன்பேரில் இருமாநில முதல்வர்களை பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தியது.
அதன்படி, கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கர்நாடகா தொடர்ந்து, காவிரி நீரை வழங்க மறுத்ததால், உடனே சுப்ரீம்கோர்ட்டை தமிழக அரசு அணுகி, முறையிட்டது. இதன் பயனாக, சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், காவிரியில் வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீரை திறந்து விடும்படி, கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில், இரு மாநில தண்ணீர் தேவையை முடிவு செய்யும் வகையில், கண்காணிப்புக்குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இது தமிழக மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
தமிழ்நாட்டில், காவிரி டெல்டா மாவட்டங்களில் 14 1/2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. அந்த பயிரை காப்பாற்ற காவிரியில் 30 டி.எம்.சி (ஒரு டி.எம்.சி என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகூர் ஆகியோர், கடந்த 5-ந்தேதி முதல் தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக மாநிலத்துக்கு கடந்த புதன்கிழமை உத்தரவிட்னர்.
அத்துடன் காவிரி கண்காணிப்பு குழு வெள்ளிக்கிழமைக்குள் கூடி, இரு மாநிலங்களின் தண்ணீர் தேவை பற்றி ஆய்வு செய்து, கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை தாங்கள் பிறப்பித்த இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். அந்த உத்தரவை ஏற்று கர்நாடகம் (6.12.12) அன்று இரவு முதல் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட்டு உள்ளது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி கண்காணிப்பு குழு அதன் தலைவரும், மத்திய நீர் வளத்துறை செயலாளருமான துருவ் விஜய் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் பிற்பகல் கூடியது. இதில் தமிழக அரசின் சார்பில், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். கர்நாடக அரசின் சார்பில், தலைமைச் செயலாளர் ரெங்கநாத்தும் மற்றும் அதிகாரிகளும் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். காவிரி கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சார்பிலும் அதிகாரிகள் பங்கு கொண்டனர்.
கூட்டத்தில், கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை 30 டி.எம்.சி தண்ணீர் கர்நாடகம் திறந்துவிட வேண்டும். அந்த பாக்கி தண்ணீரையும், வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொஎள்ளும் விதியின்படி இந்த மாதம் (டிசம்பர்) 6 டி.எம்.சி தண்ணீரும், அடுத்த மாதம் 1.5 டி.எம்.சி தண்ணீரும் திறந்துவிட கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்றவும், குடி தண்ணீருக்குமே கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது. ஆகவே, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கூட்ட முடிவில் காவிரி கண்காணிப்பு குழு 6 பக்க உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
டிசம்பர் மாதம் முழுவதும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 12 டி.எம்சி தண்ணீர் தரவேண்டும். இந்த 12 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இந்த 12 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் போதாது. அதேசமயம் இதனால் கர்நாடகத்துக்கும் பாதிப்பு ஏற்படும். 12 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட்ட பிறகு, இரு மாநிலங்களுக்கும், அவர்களின் தேவைப்படி டிசம்பர் மாதத்தில் சுமார் 47 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இரு மாநில அரசுகளும் இதனால் திருப்தி அடையாது. இருந்தாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டால், இதுதான் இப்போதைக்கு நடைமுறைக்கு சாத்தியமான தீர்வாகும். சரியான தீர்வாகவும் இருக்க வேண்டும்.
இரு மாநிலங்களின் அணைகளிலுமே நீர் இருப்பு குறைவாக உள்ளது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். கர்நாடகத்திலுள்ள 4 அணைகளிலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த சமயத்தில் சராசரியாக 53.70 டி.எம்.சி தண்ணீர் இருந்துள்ளது. ஆனால் இப்போது 36.30 டி.எம்.சி தண்ணீர்தான் உள்ளது. இத்போல் தமிழக அணையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்த சமயத்தில் சராசரியாக 59.30 டி.எம்.சி தண்ணீர் இருந்துள்ளது. ஆனால் இப்போது 17.04 டி.எம்சி தண்ணீர்தான் உள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற வழங்கிய இறுதி தீர்ப்பை இருந்தமாத இறுதிக்குள் மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட 90 நாட்களிலிருந்து அது செயல்பாட்டுக்கு வரும். நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதும் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு ஆகியவை தானாகவே காலாவதி ஆகிவிடும். நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில், காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு 419 டி.எம்.சி என்றும், டி.எம்.சி என்றும் கர்நாடகத்தின் பங்கு 270 டி.எம்.சி என்றும், கேரளாவின் பங்கு 30 டி.எம்.சி என்றும், புதுச்சேரியின் பங்கு 7 டி.எம்.சி என்றும் கூறப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்திய நிலையில் நேற்று முன்தினம் காவிரி கண்காணிப்பு குழு நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உத்தரவிட்டுள்ளது. இது முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த இரண்டாவது மாபெரும் வெற்றியாகும்.
பேச்சு வார்த்தை, பேச்சுவார்த்தை என இழுத்தடித்த நிலையில் உச்சநீதிமன்றம் சென்று, காவிரி நீரை பெற்று தந்திருக்கிறார் ஜெயலலிதா. இது அடுத்த வெற்றியாகும்.
காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை 2007-ம் ஆண்டு வழங்கியது. அன்று முதல் இந்த தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவியாக இருந்த போதே ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உண்ணா விரதமும் இருந்தார்.
கடந்த முறை முதல்வராக இருந்த போது 4 நாட்கள் உண்ணாவிரதமும் இருந்தார். காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு பெற்று தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து தன்னை வருத்தி உள்ளார் என்பது மட்டுமல்ல, தொடர்ந்து பிரதமரை வலியுறுத்தியும் வந்தார்.
தற்போது ஆட்சிக்கு வந்த (2011-ம் ஆண்டு) ஒரு மாதத்திலேயே பிரதமருக்கு ஒரு மனு அளித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு உத்தரவிடுமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
உச்சநீதிமன்றம் முன்பு இது சம்பந்தமான வழக்குகள் இருந்தால் அரசிதழில் தீர்ப்பை வெளியிடலாம். அதாவது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956 பிரிவு 6(1)-ன்படி மத்திய அரசு அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிடலாம் எ ன்று பிரதமருக்கு அளித்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
சட்டசபையில் காவிரி நீர் பிரச்சனை பற்றி முதல்வர் ஜெயலலிதா பேசியபோதும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்துவோம் என்றும் உறுதிபடக் கூறினார்.
இந்த நிலையில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் இம்மாதத்துக்குள் வெளியிட வேண்டும் என்று காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவு ஜெயலலிதாவின் முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
மத்திய அரசின் அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிட்டால் 90 நாட்களுக்குள் அந்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு சட்டரீதியான பொறுப்பும் ஏற்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 ஆண்டுக்கால முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பத்திரிகைகள் பாராட்டி உள்ளன. விவசாய பெருமக்களும், பல்வேறு கட்டியினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
``காவிரி நீர் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். காவிரி பிரச்சினையில் பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்று கூறி கர்நாடகம் இழுத்தடி நிலையில் முதல்வர் ஜெயலலிதா துணிச்சலுடன் கோர்ட்டுக்கு சென்றார், வெற்றி பெற்றுள்ளார். கண்காணிப்புக்குழு கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்தார். அதிலும் வெற்றி கண்டார். இப்போது நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவையும் பெற்றிருக்கிறார்.
காவிரி பிரச்சினையில் முதல்வர் ஜெயலிலதா அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்திருக்கிறார்'' என்று விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டியுள்ளார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி திறன் மற்றும் விடா முயற்சியின் காரணமாக இன்று இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி பாராட்டியுள்ளார்.
இதுபோல டெல்டா பகுதியிலுள்ள பொதுமக்கள் மட்டுமின்றி அரசு வல்லுநர்கள் உட்பட பல தரப்பினரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி இது என்று பாராட்டியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.