முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணிக்கம் மீதான கொடூர தாக்குதலுக்கு ஜெயலலிதா கண்டனம்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.16 - ஸ்ரீரங்கம் அந்தநல்லூர் கிளைக்கழக செயலாளர் மாணிக்கம் மீதான கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோல் தாக்குதல் சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகர் மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, அந்தநல்லூர் ஒன்றியம், அந்தநல்லூர் அக்ரஹாரம் கிளைக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் ஏ.ஆர். மாணிக்கம்  நேற்று (15.4.2011) அதிகாலை இருசக்கர வாகனத்தில் கடை வீதிக்கு சென்று கொண்டிருந்த போது, தேர்தல் முன் விரோதம் காரணமாக, முகமூடி அணிந்த நான்கு மர்ம மனிதர்கள் அவரை வழிமறித்து தாக்கியதுடன், அவருடைய வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். 

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாக்குப் பதிவு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இது போன்ற தாக்குதல்கள் இனி நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும்  மாணிக்கம் விரைவில் nullரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்