எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஏப். 17 - ஐ.பி.எல். போட்டி ஒன்றில் வலுவான மும்பை இண்டியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது கொச்சி டஸ்கர்ஸ் அணி. ஐ.பி.எல். போட்டித் தொடரின் 13-வது போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும், இலங்கை வீரர் ஜெயவர்தனா தலைமையிலான கொச்சின் டஸ்கர்ஸ் அணியும் மோதின. தான் கலந்துகொண்ட இரண்டு போட்டிகளிலும் வென்று வலுவான நிலையில் இருந்த மும்பை இண்டியன்ஸ் அணியை முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான நிலையில் இருந்த கொச்சி டஸ்கர்ஸ் அணி சந்தித்தது. டாஸ் வென்ற கொச்சி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் ஜெயவர்த்தனா பீல்டிங்கை தேர்வுசெய்தார். இதனால் மும்பை அணி பேட் செய்தது. துவக்க வீரர்களாக டெண்டுல்கர் மற்றும் ஜேக்கப்ஸ் களமிறங்கினர். துவக்கத்தில் சற்று தடுமாறிய சச்சின் பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். துவக்க ஜோடி பார்ட்னர்ஷிப்பாக 61 ரன்களை எடுத்தது. 21 பந்துகளில் 12 ரன்களை எடுத்திருந்த ஜேக்கப்ஸ், கோம்ஸின் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்ததாக அம்பதி ராயுடு களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய இளம் வீரர் ராயுடு அதிரடியாக ரன்களை குவித்தார். ராயுடு 29 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். ஆனால் 53 ரன்களை எடுத்திருந்தபோது ராயுடு, வினய்குமாரால் ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது மும்பை அணி 19.4 ஓவர்களில் 177 ரன்களை எடுத்திருந்தது. 20 ஓவர்களின் முடிவில் மும்பை இண்டியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 100 ரன்களையும், போலார்டு ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். முதலில் 43 பந்துகளில் 50 ரன்களை அடித்த சச்சின், அடுத்து 23 பந்துகளில் அடுத்த 50 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சதத்தின் மூலம் சச்சின் 20 - 20 போட்டிகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொச்சி டஸ்கர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரண்டன் மெக்கலம் மற்றும் ஜெயவர்த்தனா ஜோடி ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர். இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பாக 128 ரன்களை எடுத்த நிலையில்தான் முதல் விக்கெட்டே வீழ்ந்தது. 36 பந்துகளில் 56 ரன்களை அடித்திருந்த ஜெயவர்த்தனா, மலிங்காவின் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து களமிறங்கிய ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ரன் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 17.1 ஓவரில் கொச்சி அணி 156 ரன்களை எடுத்திருந்தபோது அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த மெக்கலம் 81 ரன்களை எடுத்த நிலையில் மலிங்காவின் பந்தில் போல்டானார். ஆனாலும் கொச்சின் அணியின் வெற்றியை தடுக்க மும்பை அணியால் முடியவில்லை. இறுதிக் கட்டத்தில் அதிரடியாக இரண்டு சிக்சர்களை விளாசிய ரவீந்திர ஜடேஜா கொச்சின் அணியின் வெற்றியை எளிதாக்கினார். இறுதியில் கொச்சி டஸ்கர்ஸ் அணி 19 ஓவர்களிலேயே 183 ரன்களை எடுத்து மும்பை அணியை வென்றது. ரவீந்திர ஜடேஜா 25 ரன்களுடனும், ஹாட்ஜ் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் கொச்சி அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக அந்த அணியின் மெக்கலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்திற்காக மும்பை அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கருக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.