முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கருணாநிதி பங்கேற்பு

புதன்கிழமை, 19 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.19 - மின்வெட்டை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வட, தென்சென்னை மாவட்டங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனும் தலைமை தாங்கினர். 

கடந்த டிசம்பர் 13-ந் தேதி தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலில் சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்டாலினை தலைமை தாங்க வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் வட, தென்சென்னை மாவட்ட தொண்டர்களை ஒரே இடத்தில் கூட்டும்போது கூட்டம் அதிகமாக வரவேண்டும்.எனவே ஸ்டாலினை தலைமை தாங்க வைத்தால் அவர் மீது இருக்கும் அதிருப்தியால் கூட்டம் வராமல் போகலாம் என சிலர் கருணாநிதியிடம் சங்கடப்பட்டவுடன், ஸ்டாலினை காஞ்சிபுரத்திற்கு அனுப்புவது என்றும், பேராசிரியர் அன்பழகனை மாதவரத்திற்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்