முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-​12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.20 - அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10-​ம் வகுப்பு, பிளஸ்​2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ,​மாணவிகள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்​2 அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது.

அரசு தேர்வுத்துறை தயாரித்துள்ள வினாத்தாள்களை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி இந்த தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு போலவே காலாண்டு, அரையாண்டு தேர்விற்கும் வினாத்தாள் படிக்க 10 நிமிடமும், விடைத்தாளில் பதிவு எண் போன்ற விவரங்களை எழுத 5 நிமிடமும், மொத்தம் 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்பட்டது.

10-​ம் வகுப்பு தேர்வு 2 1/2 மணி நேரமும், பிளஸ்​2 தேர்வு 3 மணி நேரமும் நடக்கிறது. 10- ம் வகுப்பு தேர்வு 19-​ந்தேதி தொடங்கி ஜனவரி 7-​ந்தேதி வரை நடைபெறுகிறது. இடையில் 23-​ந்தேதி முதல் 1​ந்தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறை விடப்படுகிறது.

பிளஸ்​2 தேர்வு நேற்று முதல் ஜனவரி 10-​ந்தேதி வரை நடக்கிறது. வருகிற 22-​ந்தேதி வரை தொடர்ந்து நடக்கும் தேர்வுக்கு பிறகு 23-​ந்தேதி முதல் 1-​ந்தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2-​ந்தேதி தொடங்கும் தேர்வு 10-​ந்தேதி முடிகிறது. எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வை 10 லட்சத்து 75 ஆயிரம் பேரும், பிளஸ்​2 தேர்வை 9 லட்சம் பேரும் எழுதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்