முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக் கோட்டை அருகே பஸ்-பைக் மோதலில் 3 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

அருப்புக் கோட்டை, டிச. 21 - அருப்புக் கோட்டை அருகே மினிப ஸ் சும், மோட்டார் பைக்கும் நேருக்கு நே ர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்தி லேயே பலியானார்கள். இது பற்றிய விபரம் வருமாறு - 

அருப்புக் கோட்டை அருகே உள்ள உட ன்குளத்தில் இருந்து தனியார் நூற்பு ஆலை முதல் ஷிப்டிற்கு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு தனியார் மினிபஸ் ஒன்று குலசேகரன்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தது. 

அதே நேரம், கல்லூரணியில் இருந்து அருப்புக் கோட்டைக்கு வேலைக்கு சென்ற 3 ஊழியர்கள் மோட்டார் பைக்கி ல் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்த னர். 

குள்ளம்பட்டி அருகே வந்த போது, மினிபஸ்சும், மோட்டார் பைக்கும் நேரு க்கு நேர் மோதியது. இதில் பைக்கில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

இந்த விபத்தில் பலியான 3 பேரும் கல் லூரணியைச் சேர்ந்தவர்களாவர். இதில் சிவக்குமார் (வயது 30, தகப்பனார் பெ யர் சேது நாயக்கர்),கமல் பிரசாத் (19, தகப்பனார் பெயர் பாண்டி ஆசாரி), தங்கப் பாண்டியன் (30), ஆகியோர் பலியானார்கள். சிவக் குமார் பரளச்சி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த விபத்து குறித்து ரெட்டியபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேற்படி 3 பேரின் உடலும் அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செ ல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்