முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் உற்பத்தி - பகிர்மான கழகத்தை சீரமைப்பது குறித்து ஆலோசனை

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.22 - மின் உற்பத்தி பகிர்மான கழகத்தை சீரமைப்பது  குறித்து  முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் நிலவிவரும் மின் வெட்டு மற்றும் மின்சார பகிர்மானம்  குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ராஜகோபாலன், நிதித்துறை முதன்மை செயலாளர் , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க கூடுதல் தலைமை செயலாளர், எரிசக்தி துணை செயலாளர் ராஜேஷ் லாக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர்  மற்றும் மேலாண்மை  இயக்குனர் மற்றும்  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் நிதி மறு  சீரமைப்பு திட்டம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்