எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புணே, டிச.22 - இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 35 பந்துகளில் 56 ரன்களை எடுத்து அணியின் ரன் உயர்வுக்கு உதவினார். பின்னர் பேட் செய்த இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
பின்னர் பேட் செய்யத் தொடங்கிய இங்கிலாந்து அணியில், மைக்கேல் லம்ப் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 21 ஆக உயர்ந்த போது 1 ரன்கள் எடுத்திருந்த லம்ப் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து லுக்ரைட்டுடன் ஜோடி சேர்ந்தார். ஹேல்ஸ். இந்த ஜோடியினர் இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் அந்த அணி 5.5 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. இவ்வாறு போகும் பட்சத்தில் அந்த அணி 180 ரன்களைக் கடந்து விடும் என்ற நிலை இருந்தது. ஹேல்ஸ் அதிரடி : அதிரடியாக விளையாடிய ஹேல்ஸ் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் அரை சதமடித்தார். இவருடன் மறுபுறம் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டி வந்த ரைட்டை யுவராஜ் சிங் வெளியேற்றினார். அவர் 21 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர் 10.1 ஓவர்களில் 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. யுவராஜ் சிங்கின் நேர்த்தியான சுழற்பந்து வீச்சில் அந்த அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்ததுடன் ரன் விகிதமும் குறைந்தது. ரைட்டைத் தொடர்ந்து ஹேல்ஸ் 56 ரன்களிலும் மோர்கன் 5 ரன்களிலும் யுவராஜ் பந்து வீச்சில் நடையைக் கட்ட அணியின் ரன் உயர்வு தடுக்கப்பட்டது. இவர்களில் ஹேல்ஸை போல்டாக்கினார் யுவராஜ். பின்னர் களமிறங்கிய வீரர்களில் பட்டேல் 24 ரன்களும், ஆட்டமிழக்காமல் பட்லர் 33 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் யுவராஜ் சிங் 3 விக்கெட்டுகளையும் அசோக் திண்டா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். அதிரடி வெற்றி: 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து பேட் செய்யத் தொடங்கிய இந்திய அணியில் ரஹானேவும், கம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி ஓரளவு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தது. அணியின் ஸ்கோர் 42 ஆக இருந்த போது 16 ரன்கள் எடுத்திருந்த கம்பீர் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து 19 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவும் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் அபாரம்: பின்னர் கோலியுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். கோலி மெதுவாக
விளையாட, யுவராஜ் தனது வழக்கமான ஆட்டத்தைக் கையாண்டார். அவரது அதிரடியில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அணியின் ஸ்கோர் 93 ஆக உயர்ந்த போது யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் வெற்றி இலக்கை நோக்கி சீராக வெற்றி இலக்கை நோக்கி சீராக நகர்ந்தது. வெற்றிக்கு மேலும் 10 ரன்கள் என்றிருந்த போது 26 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா ரன் அவுட்டானார். பின்னர் அதே ஓவரில் தோனி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 21 பந்துகளில் 24 ரன்களில் தோனியும், ரன் ஏதுமின்றி ஜடேஜாவும் இறுதி வரை களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரெஸ்னன் 2 விக்கெட்டுகளையும் மேக்கர், ரைட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் : 4 ஓவர்கள் பந்து வீசி 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 21 பந்துகளில் 38 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த யுவராஜ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில்
1-0 என்ற முன்னிலை பெற்றது இந்திய அணி. கடைசி டி20 போட்டி வரும் 22 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.