முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்லாத காசுக்கு பாதுகாப்பு தேவை இல்லை: அரசு கொறடா

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - செல்லரித்த காதுக்கு வெள்ளைக் கம்மல் தேவைஇல்லை, செல்லாத காசுக்கு பாதுகாப்பு தேவைஇல்லை என்று அரசு கொறடா வைகைச் செல்வன் கூறினார். இளைஞர்கள் பாசறை- இளம் பெண்கள்  பாசாறை ஆலோசனை கூட்டத்தில் அரசு கொறடவும், பாசறை செயலாளரும் டாக்டர்.வைகைச்செல்வன் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்கள் தினமும் பல நல்ல திட்டங்களை அனுபவித்து வருகிறார்கள். ஜெயலலிதா என்றாலே சாதனைதான். கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளின் 3 நாட்கள் மாநாட்டில் 343 அறிவிப்புகளை வெளியிட்டு புதிய சாதனை படைத்தார். அனைத்துத் துறைகளை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றினார்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கருணாநிதி ஆதரித்தார். அவர் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்துவிட்டார். கருணாநிதியின் கபட நாடகத்தில் இதுவும் ஓன்று. மத்தியில் தனது கட்சியின் மானத்தை காப்பாற்ற முடியவில்லை. திஹார் சிறை வரை சென்ற பெருமை தி.மு.க.விற்கும், கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் மட்டுமே சேரும்.

ஜெயலலிதாவின் கொள்கை பிடிப்பினால் ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தியே தீருவேன் என்று எண்ணற்ற பல நல்ல திட்டங்களை அறிவித்து இன்று தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க பாடுபட்டு வருகிறார். மக்களுக்கு நாள் என்றும் நேரம் காலம் என்றும்  பார்க்காமல் உழைக்கிறார்.

கலெக்டர்கள் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் 343 அறிவிப்புகளை வெளியிட்டு புதிய சாதனை படைக்கிறார். காவிரி நீர் பிரச்சினையில் ஆணையத்தின் தீர்ப்பை மத்திய அரசின் இதழில் வெளியிட முயற்சி செய்து அதில் வெற்றியும் பெறுவார். ஜெயலலிதாவின் ஆட்சி திறமையை கண்டு உலகமே வியந்து பார்க்கிறது.

தேசிய அரசியலுக்கு தகுதியான ஒரே தலைவி ஜெயலலிதாதான். மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி உள்ளார். இதன் மூலம் மாணவர்கள் உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

உள்ளாட்சி தேர்தலில் 10-க்கு 10 என்று அனைத்து மேயர் பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது அதேபோல் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 என்று எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இந்தியாவை வழி நடத்தி தலைவராக திகழ்வார். தமிழகத்தை போல் இந்தியாவையும் வல்லரசு நாடக மாற்றும்  திறன் படைத்த தலைவராக வரப்போகிறார்.

செல்லரித்த காதுக்கு வெள்ளை கம்மல் தேவைஇல்லை. செல்லாத காசுக்கு பாகுகாப்பு தேவை இல்லை. கருணாநிதிக்கு இந்த பழிமொழி பொருத்தும். அவரை பற்றி பேசுவதை விட மக்கள் புரிந்து வைத்து இருக்கிறார்கள். அவருக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்