முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி மீது பாலியல் வன்முறை: சரத்குமார் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவைகுண்டம் பகுதியிலுள்ள கிளாக்குளம் கிராமத்தை சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகள் புனிதா, ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது நிரம்பிய சிறுமி. டெல்லியில் நடந்த கோர கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. ஈவு, இரக்கமற்ற அந்த பாவிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து அதிகபட்சமான தூக்கு தண்டனை வழங்கி இதுபோன்ற செயல்களில் இனி எவரும் ஈடுபடாத அளவிற்கு அமைந்திட செய்திடல் வேண்டும். 

மனித ரூபத்திலிருக்கும் இதுபோன்ற காட்டு மிருகங்களை வெளியில் நடமாட விடக் கூடாது. குற்றவாளிகள் தப்பித்து விடாமல் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இது பேராபத்தை அறியும் ஒவ்வொருவரும் அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் ஒரே கருத்தைக் கொண்டு தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும். இந்த ஆபத்து நிகழும்போது அந்த பிஞ்சு உள்ளம் எத்தகைய துன்பத்திற்கு ஆளாகியிருக்கும், துடித்து கதறியிருக்கும் என்று எண்ணும்போது கண்கள் கலங்குகின்றன. 

சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் அந்த குழந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, ஏற்கனவே தந்தையை இழந்த அந்த குடும்பத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு சரத்குமார் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்