முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா பிரதமராக வந்தால்... அமைச்சர் பேச்சு

திங்கட்கிழமை, 24 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

பெருந்துறை,டிச.24ஜெயலலிதா பிரதமராக வந்தால் மத்திய அரசிடம் நாம்கேட்கும்நிலைமாற்றி அனைவருக்கும் ஜெயலலிதா கொடுப்பவராக திகழ்வார் என்றுஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

தமிழக முதல்வர் ஆணைக்கினங்க தமிழ்நாடு-மற்றும்பாண்டிச்சேரிக்குஉட்பட்ட 40 பாராளுமன்ற தொகுதிசெயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 40 வதுகூட்டமாகதிருப்பூர் பாராளுமன்ற தொகுதிஆலோசனைக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.  முன்னால் அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ, திருப்பூர் சிவசாமி எம்.பி,திருப்பூர்மேயர் ஏ.விசாலாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் ,தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம் ஆனந்தன் வரவேற்று பேசுகையில்,  தமிழகத்திலேயே திருப்பூர் தொகுதிதான் அதிக அளவுவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஎன்று சாதனையை நாம் உருவாக்கும் வகையில் செயல்படவேண்டும்.அம்மாவை பிரதமராக்கும் வகையில்  கொங்கு மண்டலத்திற்கு பெருமைசேர்க்கும்படி தொண்டர்கள் முழுமுச்சுடன்பாடுபாட வேண்டும். கூட்டத்தில் ஈரோடு புற நகர் மாவட்ட செயலாளரும்,தமிழக வருவாய்த் துறை  அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் தலைமைதாங்கி பேசியதாவது :வரும் பாராளுமன்றதேர்தலில்40 தொகுதிகளிலும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வெற்றி பெறவேண்டும்.காவிரி, முல்லைபெரியாறு, பாலாறு , கச்சத்தீவு என பல பிரச்சனைகளிலும் மத்திய அரசுதமிழகத்தை வஞ்சித்து வருகின்றது. மத்திய அரசு நமக்கு இழைத்து வரும் துரோகத்தை தடுக்க முதல்வர் அம்மா பிரதமராக வேண்டும்.கொங்கு மண் அ.தி.மு.க வின் எக்கு கோட்டை என்பதை அதிக வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுகாட்டவேண்டும்.இவ்வாறு ஈரோடு புற நகர் மாவட்ட செயலாளரும்,தமிழக வருவாய்த் துறை  அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் பேசினார். கூட்டத்தில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் நத்தம் ரா.விஸ்வநாதன் பேசியதாவது: அம்மா ஆட்சியை அணைவரும் பாராட்டுகிறார்கள்.மின் பற்றக்குறை தி.மு.க ஆட்சியில்தான் ஏற்பட்டது. முதல்வர் அம்மா இப்பிரச்சனையில் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டிகொண்டு இருக்காமல்,மின் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றர். மத்தியஅரசிடம் 1000 மெகா வாட் மின்சாரம் கேட்டும் கிடைக்கவில்லை.மின்சாரம் மட்டுமின்றி மின் உற்பத்திக்கான நிலக்கரியும் மத்திய அரசு தரவில்லை. மேலும் நாங்கள் மின்சாரம் தயாரித்துக்கொள்ள  அனுமதியும் தர மறுக்கிறார்கள். அம்மா மின்உற்பத்தி திட்டங்களை புயல் வேகத்தில் தொடங்கி செயல்படுத்திவருகின்றார். புதிய யூனிட்டுகள் அமைக்க அணையிட்டு அவற்றை விரைந்து முடிக்க உத்திரவிட்டுள்ளார்.  தமிழகத்தில்படிப்படியாக மின்உற்பத்தி நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. வரும் ஜுன் மாதத்தில் மின் பற்றாக்குறைதீர்ந்து  மின் மிகை மாநிலமாகதமிழ்நாடு மாறும்.மேலும் அம்மாதொலைநோக்கு திட்டமாக  சூரிய ஒளிமுலம்3000 மெகா வாட்  மின் சக்தி பெரும்திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றர்.இப்போது மின்பற்றாக்குறையை

சொல்லி அரசியல் செய்பவர்கள் நம்மை எதிர்க்க முடியாமல் போட்விடுவார்கள். இவ்வாறு தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் நத்தம் ரா.விஸ்வநாதன் பேசினார்.தமிழக வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் பேசியதாவது:முதல்வர் அம்மா 69 சதவீத  இட ஒதுக்கீட்டை பெற்றுதந்து  அதை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றர்.சமூகத்தில் மாற்றம் உருவாககல்வியால் மட்டும்முடியும் என்று முதல்வர் அம்மா தமிழக பட்ஜெட்டில் 6சதவீதம் அதாவது ரூ17 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார்.  அம்மாகல்வியில் தமிழகத்தை முதல் மாநிலமாக்கிசாதனை படைத்து வருகின்றார்.தமிழகத்தை அம்மாவால் மட்டுமே காக்க முடியும் . இந்தியாவை வல்லரசாக மாற்ற அம்மா வால் மட்டும் தான் முடியும் .நாம்அம்மாவை பிரதமராக்க பாடுபடவேண்டும்.கூட்டத்தில்  தமிழக நகராட்சிநிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி த்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியாதவது:சட்ட மன்ற தேரதல் நேரத்தில் அம்மா 54 வாக்குறுதிகளைஅறிவித்தார்.19 மாத காலத்தில்  இந்திய அளவில் அந்த 54 வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் ஒரே முதல்வர் அம்மாதான்.உணவுக்கும்,உடைக்கும், இருப்பிடத்திற்கும் உத்திரவாதம் கொடுக்கும் ஒரே முதல்வர் அம்மா தான்.அம்மாபிரதமராக வரவேண்டும் அந்த வகையில் 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறவேண்டும்.கூட்டத்தில்  அ.தி.மு.க பொருளாளரும், தமிழக நிதி அமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றிபேசியதாவது;இந்தகூட்டம் வெற்றிக்கூட்டமாக தான் பார்க்கிறேன்.வாழும் சரித்திரமாக முதல்வர் அம்மா திகழ்ந்து வருகின்றார்.புரட்சி தலைவர் காலத்தில்18 லட்சம் உறுப்பினர்களுடன் இருந்த கழகம் தற்போது 1.1/2 கோடி உறுப்பினராக உள்ளது.இந்த கழகத்தில் சாதாரண தொண்டனாக இருப்பதே நமக்கு பெருமையான விஷயமாக உள்ளது. விலையில்லா அரிசி,இலவசவேட்டி-சேலைகள்,பசுமை வீடுகள்,புதிய அரசு கலை கல்லூரிகள்,பொறியல் கல்லூரிகள்,வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்குதல் என்று கட்சியிலும்,ஆட்சியிலும்  உன்னதமான நிலையை முதல்வர் அம்மா உருவாக்கி செயல்பட்டு வருகின்றர்.காவிரி,முல்லைபெரியார்,பாலாறு,கச்சத்தீவு என தமிழகத்தின் ஜீவாதாரப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாதவர் கருணாநிதி.ஆனால் அம்மா தமிழக மக்களின் ஜீவாதரப்பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசும்,ப.ஜ.காவும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும்.தமிழக முதல்வர் அம்மா தான் பராத பிரதமராக வர வேண்டும். அம்மா பிரதமராக வந்தால் மத்திய அரசிடம்  நாம் கேட்டும் நிலை யை மாற்றி  அனைவருக்கும் கொடுக்கும் நிலையைகொடுப்பவராக அம்மா திகழ்வார். அதற்கு 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறவேண்டும். அ.தி.மு.கவின் சோதனைகாலங்களிலும் வெற்றியை கொடுத்தது கொங்குநாடு.கொங்கு நாட்டில் நமக்கு எப்போதும் வெற்றிதான். இந்த வகையில் நீங்கள் செயல்பாட வேண்டும். 40 தொகுதிகளிலும் நாம் வென்று முதல்வர் அம்மா புதுடெல்லி சென்று திரும்பும்போதுநாட்டின் பிரதமராக திரும்ப செய்வோம். இவ்வாறு அ.தி.மு.க பொருளாளரும், தமிழக நிதி அமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்