எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஏப்.18 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் பரிதாப தோல்வி அடைந்தது ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் சங்ககாராவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்களாக சன்னி சோஹால் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் சோகால் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 13 ஐ எட்டியபோது ஹாரிஸின் பந்துவீச்சில் கிளீன்போல்டானார் சோஹால். அடுத்து கேப்டன் சங்ககாரா, தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 11 ஓவர்களில் 88 ரன்களை எட்டியபோது அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சங்ககாரா, சாவ்லாவின் பந்தில் மெக்லாரனால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 35. அடுத்த ஓவரிலேயே தவானும் 45 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவரை வல்தாட்டி வீழ்த்தினார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள். அடுத்து ஜோடிசேர்ந்த டுமினி, சிப்லி இணை அதிக ரன்களை சேர்க்க தவறியது. 12 பந்துகளில் 14 ரன்களை எடுத்திருந்த சிப்லியும் வல்தாட்டியின் பந்திலேயே கிளீன் போல்டானார். அடுத்து கிறிஸ்டியன் களமிறங்கினார். இந்நிலையில் 18 வது ஓவரில் அணியின் எண்ணிக்கை 129 ஆக இருந்தபோது 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டுமினி, மெக்லாரனின் பந்துவீச்சில் சாவ்லாவிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக கிறிஸ்டியன் ரன்களை சேர்த்ததால் டெக்கான் அணியின் ஸ்கோர் ஓரளவு கெளரவமான நிலையை எட்டியது. 14 பந்துகளில் 30 ரன்களை அடித்த கிறிஸ்டியன் 19 வது ஓவரில் வல்தாட்டியின் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 7 விக்கெட் இழப்பிற்கு 156. அடுத்து இறங்கிய அமித் மிஸ்ரா ரன் எதுவும் எடுக்காத நிலையில் வல்தாட்டியின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். இறுதியில் டெக்கான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் அணி சார்பில் மிகப் பிரமாதமாக பந்துவீசிய வல்தாட்டி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெக் லாரன் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் மற்றும் சாவ்லா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் அதிரடி வீரர் வல்தாட்டி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர். இவர்கள் இருவரின் அதிரடியில் டெக்கான் பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது அதிரடியைக் காட்டிய வல்தாட்டி இந்த போட்டியிலும் ஜொலித்தார். இதனால் பஞ்சாப் அணி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 136 ரன்களை குவித்தது. இந்த நிலையில் 46 பந்துகளில் 61 ரன்களை குவித்திருந்த கில்கிறிஸ்ட், அமித் மிஸ்ராவின் சுழலில், ரவி தேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நாயர், வல்தாட்டியுடன் ஜோடி சேர்ந்தார். 47 பந்துகளில் 75 ரன்களை எடுத்திருந்த வல்தாட்டி, மிஸ்ராவின் பந்துவீச்சில் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். வல்தாட்டியின் 75 ரன்களில் 8 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் 17.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எட்டியது பஞ்சாப் அணி. நாயர் 13 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 75 ரன்களையும் குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் வல்தாட்டி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 6 வது இடத்தை பெற்றது. டெக்கான் சார்ஜர்ஸ் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியையும், 3 தோல்விகளையும் பெற்று புள்ளிகள் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.