எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.1 - குடகுவிட்டுக் குதித்து வரும் காவிரியை அடகுவைத்த கருணாநிதியின் வரலாற்றுப் பிழையை சரி செய்வேன் என்று முதல்வர் ஜெயலலிதா சூளுரைத்தார். அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:-
சென்னை, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற,
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:-
அரசியலில் நான் அடியெடுத்து வைத்து முப்பது வருடங்களை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில், அந்த முப்பது வருடங்களில் இருபத்தைந்து வருடங்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்று கழகத்தை வழி நடத்தி வருகிறேன் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருந்தது.
என்னுடைய அரசியல் பயணத்தில், பல்வேறு இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும், சோதனைகளையும் நான் சந்தித்த போது, எனக்கு உறுதுணையாக இருந்து நீங்கள் காட்டி வரும் பாசத்திற்கும், பரிவிற்கும், அன்பிற்கும், எனது நன்றியைத் தெரிவித்து, இந்தத் தருணத்தில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்டுவரும் இந்த 25 ஆண்டு காலத்தில் கழகம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் போது, உண்மையிலேயே வியப்பாகத் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்னை கழக கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்த போது, நான் தினந்தோறும் தலைமைக்கழகம் செல்லுவேன். உங்களுக்கு எல்லாம் தெரியும். அப்போது கழகத்தின் வங்கிக் கணக்கில் ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் கூட இல்லை. ஆனால், இன்று நம்முடைய தலைமைக் கழகக் கணக்கில் வைப்பு நிதி மற்றும் 118 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரத்து 530 ரூபாய் அளவிற்கு இருக்கிறது என்று சொன்னால், இது வளர்ச்சி இல்லை என்றால் வேறு எது தான் வளர்ச்சியாக இருக்க முடியும்? அதுமட்டுமல்ல, 1986ஆம் ஆண்டு அப்போது எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது தலைமைக் கழகத்தில் அனைத்து கழக உறுப்பினர்களுக்கும் புதிய உறுப்பினர் கார்டு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அந்தப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். அன்றைய தினம் கழகத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 லட்சம். ஆனால் இன்று உண்மையாகவே கழகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சம் ஆகும். இத்தயை ஒரு வளர்ச்சியை வேறு எந்த அரசியல் இயக்கமும் இந்தியாவிலேயே கண்டிருக்க முடியாது என்பதை நான் திட்டவட்டமாகச் சொல்லுவேன்.
ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கி சீரழிக்கப்பட்ட தமிழகத்தை, தமிழக மக்களின் துணை கொண்டு மீட்டோம். அப்படி மீட்ட தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாய் மாற்ற வேண்டும் என்கிற முனைப்போடு இலக்கைத் தீர்மானித்துக் கொண்டு நம் பயணத்தை நாம் வெற்றிகரமாகத் தொடர்கிறோம். ஆனால், அதற்கு சவால் விடுக்கின்ற விதத்திலே எத்தனையோ தடைகள் நம் முன்னே எதிர் வந்து நிற்கின்றன என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஒரு புறம் ஐந்தாண்டு கால மைனாரிட்டி திமுக ஆட்சியால் சீரழிக்கப்பட்ட தமிழகத்தை செப்பனிடும் பணிகளை மேற்கொண்டு வருவது; மறு புறம் வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்ல சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு கடமையாற்றுவது என; எனது தலைமையிலான கழக அரசு போராடி வருகிறது. அதே வேளையில், மத்தியில் ஆளும் கருணாநிதி முட்டுக் கொடுத்து தாங்குகின்ற மத்திய அரசு, எத்தனை வகைகளில் முட்டுக்கட்டை போடுகிறது என்பதை நீங்களும் அறிவீர்கள்.
காவேரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சினை, கச்சத் தீவு விவகாரம்; தமிழகத்திற்கான அரிசி, மண்ணெண்ணெய், எரிவாயு, கூடுதல் நிதி போன்ற அனைத்து கோரிக்கைகளிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும், தமிழக மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுகின்ற முனைப்பில் நாம் வெகுவான வெற்றிகளைப் பெற்றிருக்கின்றோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
பேரறிஞர் அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும், என்னையும், அரசியல் உலகத்திற்கு அளித்திட்ட கலை உலகத்தைக் காத்தது உங்கள் அன்புச் சகோதரி தலைமையிலான கழக ஆட்சி தான். இப்படி, வெள்ளித் திரையை மீட்ட நாம், கருணாநிதியின் குடும்பக் கொள்ளையில் இருந்து தமிழக மக்களைக் காக்க அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைத்து; அதன் வழியே தமிழக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் நிறைவான சேனல்களை வழங்கி வருவதைப் போலவே; சென்னை மாநகருக்கும் வழங்குவதற்கு முயற்சிக்கும் நிலையில், தங்களது குடும்ப நிறுவனங்களின் மூலம் தங்களது ஏகோபித்த உரிமையை நிலை நிறுத்திட, மத்திய காங்கிரஸ் அரசைக் கொண்டு முட்டுக்கட்டைப் போடுவதையும்; அதனை உடைத்தெறிய உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் போராடி வருவதையும் தமிழக மக்கள் அறிவார்கள்.
காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், அதனை மத்திய அரசு, மத்திய அரசிதழில் வெளியிட முன்வராத சூழ்நிலையில், ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் இதை வெளியிட, தான் தாங்கி இருக்கும் மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்தாத சூழ்நிலையில்; இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதே காவேரியில் நமக்குரிய பங்கை உறுதி செய்யும் என்பதால், நான் அது குறித்து மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். எனினும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், எனது ஆணையின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதன் மூலம், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் தடுக்கும் நோக்கில் மறைமுக வேலைகளை செய்து வருகிறார் கருணாநிதி.
இருப்பினும், குடகு விட்டு குதித்து வரும் காவேரியை அடகு வைத்த கருணாநிதியின் வரலாற்றுப் பிழையை நான் நிச்சயம் சரி செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வாக்களித்த மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை இம்மியும் குறையாமல் நிறைவேற்றும் விதமாக மாணவச் செல்வங்களுக்கு மடிக் கணினி; இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், ஃபேன்; வறுமையின் பிடியில் ஆட்பட்டுக் கிடக்கும் ஏழைஎளிய பாமர மக்களை மீட்டெடுக்கும் விதமாக கறவை மாடு, ஆடுகள் என பின்தங்கிக் கிடக்கும் மக்களின் பொருளாதாரத்தை, வாழ்வாதாரத்தை, மீட்டெடுக்கும் வகையிலான மீட்சி நடவடிக்கைகளாக இந்தத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
விலையில்லா அரிசி; தாலிக்கு தங்கம்; மீன்பிடி தடைக்கால உதவித் தொகை இரட்டிப்பு; முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை இரட்டிப்பு என
ஒரு கனிவுள்ள அரசாங்கமாக, எளியோரின் பாதுகாவலராக நம் கழக அரசு திகழ்ந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமும்; தமிழ் நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவும்; லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி இருக்கிறோம். அதுவும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தைப் போல் அல்லாமல் முறையாக தகுதித் தேர்வுகளை முறைகேடுகள் இல்லாமல் வெளிப்படையாக நடத்தி, இளைஞர்களின் வாழ்வில் விளக்கேற்றி இருக்கிறோம்.
மேலும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட அனைத்து வகைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரே நாளில் பிரபலமான
12 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட புரட்சிகளையும் செய்திருக்கிறோம். ஆக, அடித்தட்டு மக்களுக்கு பொருளாதார உதவிகளும்; வறுமையைப் போக்கும் திட்டங்களும் ஒரு புறம் என்றால்; அதே வேளையில், பள்ளிக் கல்வித் துறைக்கு இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு நிதியாண்டிற்கு மட்டுமே 14,553 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து கல்லாமையை நீக்குகிற அரசாக; அறிவொளியை ஏற்றி வைக்கிற அரசாக; உங்கள் அன்புச் சகோதரியின் அரசு திகழ்கிறது என்பதிலும் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்.
ஆக, கல்லாமை நீக்கி; இல்லாமை போக்கி; இவை இரண்டோடு வேலை இல்லாமையையும் அடியோடு அகற்றி; தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து வந்து இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாய் மாற்றுவதற்கு உழைத்து வரும் கழக அரசின் சாதனைகளை தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.
அது போலவே, கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி சீரழித்த ஆவினை, அடியோடு மீட்டுவிட்டோம். போக்குவரத்துத் துறையை பொறுப்போடு மீட்டிருக்கிறோம். அதனால் இன்று புதுப் புது பேருந்துகள் தமிழகமெங்கும் வலம் வந்து மக்களுக்கு மகிழ்வைத் தருகின்றன.
இவ்வளவு சாதனைகளை நாம் நிகழ்த்தி இருந்தாலும், தமிழ் நாட்டு மக்களை பாதிப்படையச் செய்துள்ள பிரச்சனை மின் பற்றாக்குறை என்பதை நான் அறிவேன். முந்தைய மைனாரிட்டி திமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட மின் பற்றாக்குறையினை நீக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் நான் எடுத்து வருகிறேன். மிக விரைவில் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை சீர் செய்யப்படும். எனது முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலவே தமிழகத்தை, மிகை மின் உற்பத்தி மாநிலமாய் விரைவில் மாற்றிக் காட்டுவேன். 2013ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
இந்தப் பிரச்சனையைப் பற்றி கழக உடன்பிறப்புகள் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, மக்கள் மத்தியில் பேசுகின்ற போது, எளிமையான ஒரு கருத்தை எளிதில் புரியக் கூடிய ஒரு கருத்தை அனைவரும் அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்று கடுமையான மின்பற்றாக்குறை தமிழகத்தில் நிலவுகின்றது. இதற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் காரணம்? 2006ல் முதலமைச்சர் பதவியை விட்டு நான் செல்லுகின்ற போது தமிழ் நாடு மின்சார உற்பத்தில் உபரி மாநிலமாக இருந்தது, மின் மிகை மாநிலமாக இருந்தது. மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 2011ஆம் ஆண்டில் மீண்டும் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது பார்த்தால் தமிழ் நாடு மின் குறை மாநிலமாக இருந்தது. ஆகவே, இதற்கு நாம் எப்படி காரணமாக இருக்க முடியும்? என்னுடைய அரசு எப்படி காரணமாக இருக்க முடியும்? இடையில் இருந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்டது யார்? கருணநிதி அல்லவா, திமுக மைனாரிட்டி ஆட்சி அல்லவா? ஆகவே, இன்று நிலவும் இந்தக் கடுமையான மின்பற்றாக்குறை நிலைமைக்கு முழு பொறுப்பு, முழு காரணம் திமுக அரசு தான், அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தான் என்பதை அனைவரும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ