முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி ஒரு செல்லாக்காசு: ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 - கருணாநிதி ஒரு செல்லாக்காசா ஆகிவிட்டார் என்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று பொதுக்குழுக் கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையிலும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பா.வளர்மதி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி மற்றும் நாஞ்சில்சம்பத் உள்ளிட்டோர் பேசினர்.

பொதுக்குழுவில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

கருணாநிதி ஒரு செல்லாக்காசாக ஆகிவிட்டார். தமிழர்களை ஏமாற்ற கபட நாடகம் ஆடுகிறார். ஒரு கருப்பு காசு அவருடன் கூட்டணி வைக்கப்போகின்றது. அந்த கருப்பு காசு, தெய்வத்தோடு மட்டும்தான் கூட்டணி என்று கூறக்கூடியவர்.

டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்து விட்டனர். எனவே அவர்கள் மாநாட்டை புறக்கணித்தார்கள்.

அடுத்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தின் மாநாட்டை நமது முதல்வர் ஜெயலலிதாதான் நடத்தப் போகிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

நாஞ்சில்சம்பத் பேசும்போது, ஆட்சியும் அதிகாரமும் முதல்வர் ஜெயலலிதா கையில் இருக்கும் சூழலில், ஒன்றுமே இல்லாத கருணாநிதி மின்சாரம் குறித்து என்ன செயற்குழு கூட்டம் போடுகிறீர்கள். மத்திய அரசிடமிருந்து மின்சாரத்தை கேட்கத் தெரியாத தி.மு.க. எதற்காக செயற்குழு கூட்டம் போடுகிறீர்கள் என்று அவர் பேசினார்.

அமைச்சர் பா.வளர்மதி பேசும்போது, முதல்வர் ஜெயலலிதா விருந்து கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம். மருந்து கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம். முதல்வர் கையை காட்டினால் கல் கூட விக்கிரகம்தான். கையை மடக்கினால் சிலைகூட நமக்கு கல்தான் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்