முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய வாலிபர் கொலை

செவ்வாய்க்கிழமை, 1 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

பெரம்பூர், ஜன. - 2 - சென்னையில் நண்பர்களுடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய ரஞ்சித் என்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வால்டாக்ஸ் ரோடு எடப்பாளையம் பகுதியில் நடைபாதையில் வசித்து வந்தவர் ரஞ்சித் (25). இவர் மீது அடி தடி வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருடன் ரஞ்சித்துக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரஞ்சித்தும் அவரது கூட்டாளி ஆனந்த் என்பவரும் சேர்ந்து சங்கரை வெட்டினார்கள். இதில் சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். நேற்று முன்தினம் இரவு பேசின் பிரிட்ஜ் பெரியார் நகர் அவுசிங் போர்டு மைதானத்தில் ரஞ்சித் நண்பர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினார். அப்போது ஒரு ஆட்டோ திடீரென்று மைதானத்துக்குள் வந்தது. அதில் இருந்து கத்தி கம்புடன் சிலர் இறங்கினார்கள். அவர்களை பார்த்ததும் மைதானத்தில் இருந்தவர்கள் பயந்து ஓட்டம் பிடித்தார்கள். கொலைக்கும்பல் அரிவாளுடன் ரஞ்சித்தை துரத்தி துரத்தி வெட்டியது. பலத்த வெட்டுபட்ட ரஞ்சித் அதே இடத்தில் இறந்தார். தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு உதவி ஆணையர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் ரஞ்சித் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மாரி, இளம்பரிதி, வெங்கடேசன், சேட்டு ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள துணை நடிகர் சங்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சங்கரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலையை செய்ததாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

படவிளக்கம்: 1

புளியந்தோப்பு பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட ரஞ்சித்தை படத்தில் காணலாம். 

 

படவிளக்கம்: 2

வடசென்னையில் ரஞ்சித் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மாரி, இளம்பரிதி, வெங்கடேசன், சேட்டு ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது எடுத்தபடம்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்