முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைஉயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,, ஜன, - 3 - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடிய வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்து மேல்முறையீடு தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் பாரி தமிழில் வாதாடினார். இதற்கு, உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இல்லை என்பதால் வாதாட முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பதாக நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார். தமிழில் வாதாடலாம் என தலைமை நீதிபதி கடந்த ஆண்டு வாய்மொழியாக அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்