எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன. - 8 - அரசாங்கத்திற்கு வரியை கட்டாதவர்களுக்கு கடுமையான சட்டம் போட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இதுபற்றிய விபரம் வருமாறு:- மத்திய அரசு சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு புதிதாக சேவை வரி விதித்துள்ளது. 12.6 சதவிகித இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் திரைப்பட துறையை சார்ந்த அனைத்து தொழிலாளர்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, ரஜினிகாந்த், சத்யராஜ், பாண்டியராஜ், கே.பாக்கியராஜ், விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா, விஷால், அருண்விஜய், பிரசாந்த், பிரசன்னா, கஞ்சா கருப்பு, விஜயகுமார், தியாகு, மனோபாலா, பிரபு, விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, விவேக், செந்தில், அப்புக்குட்டி, டெல்லி கணேஷ், வாகை சந்திரசேகர், எஸ்.வி.சேகர், மன்சூர் அலிகான், வி.எஸ்.ராகவன், ராஜேஷ், பொன்வண்ணன், நடிகைகள் ரோகிணி, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, ஊர்வசி, ரோஜா, சினேகா, மும்தாஜ், வடிவுக்கரசி, இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், வஸந்த், சுந்தர் சி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.ஆர்., கலைப்புலி தாணு, எல்.சுரேஷ், அன்பாலயா பிரபாகர், கே.ராஜன், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், அண்ணாமலை, பைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், யார் கண்ணன் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது:-
ரஜினிகாந்த்:
இந்த சேவை வரி எதிர்ப்புக்கு நான் ஆதரவு தருகிறேன். அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று புது புது திட்டங்கள், முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில் சேவை வரி என்பது கருப்பு பண புழக்கத்திற்கு வழி வகுத்துவிடும். அதே நேரத்தில் அரசாங்கம் விதிக்கும் வரியை கட்டாதவர்கள் மீது கடுமையான சட்டம் போட வேண்டும். அப்படி செய்தால் புதிய சேவை வரி தேவைப்படாது.
விவேக்:
கலைஞர்கள் ரொம்பவம் தெம்பாக இருக்கிறார்கள் என்று அரசாங்கம் இந்த சேவை வரியை விதித்திருக்கிறது. மதன்பாபு உடல் சைசை பார்த்து வரி போடக் கூடாது. மனோபாலா சைசையும் பார்க்க வேண்டும். நடிகர்களுக்கு பென்ஷன் கிடையாது. எத்தனை நாள் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூற முடியாது. புயல், வெள்ளம், சுனாமி ஆகியவை வரும்போது முதலில் குரல் கொடுப்பவர்கள் நடிகர்கள்தான். ஒரு படம் நல்ல படமாக இருந்தால் அதை விளம்பரப்படுத்த அதிக செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் அது வெற்றி படமாகிறது. சினிமாவில் இவ்வளவு சிக்கல் இருக்கும்போது சேவை வரி என்பது மிகவும் கஷடமானது.
1970 ஆம் ஆண்டு சீனாவுடன் போர் ஏற்பட்டபோது நம்முடைய நடிகர்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர்., சந்திரபாபு என பலர் கலைநிகழ்ச்சி நடத்தி, அதில் வசூலான நிதியை அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார்கள். இப்படி எவ்வளவோ சம்பவங்களை சொல்ல முடியும். எனவே சேவை வரியை ரத்து செய்யுங்கள்.
டெல்லி கணேஷ்:
கார்கில் போர் நடந்தபோது நம்முடைய கலைஞர்கள்தான் ராணுவ வீரர்களை சந்தோஷப்படுத்தினார்கள். தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க கூட்டம் சேர்க்க அரசியல்வாதிகள் எங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். இதை மனதில் வைத்து சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்.
கே.ராஜன்:
சுதந்திரம் வாங்கி 61 வருஷமாச்சி. இன்னும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை அரசாங்கத்தால் காப்பாற்ற முடியவில்லை. டெல்லியில் இருக்கும் மந்திரிகள் உயரத்தில் அமர்ந்து கொண்டு மக்கள் குறைகளை பார்க்க மறந்து விடுகிறார்கள். சினிமாவில் ஒரு சிலர் வெள்ளையாக இருப்பார்கள். மற்றவர்கள் எல்லோரும் கருப்பாக இருப்பார்கள். ஆனால் எல்லோரும் ஏசியில் வாழ்கிறவர்கள் அல்ல. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி விளம்பரம் வருமாபோது நாங்கள் அரசுக்கு தேவைப்படுகிறோம். ஆட்சி மாற்றங்கள் கூட சினிமாக்காரர்களால் தான் நிகழ்ந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர். கூட நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. அவர் இறந்தபோது வறுமையில்தான் இறந்தார். இப்படி எத்தனையோ நடிகர்கள் வறுமையில் வாழ்ந்து இறந்திருக்கிறார்கள். சினிமாவில் இருப்பவர்கள் வேறு தொழில் செய்வதில்லை. பட வாய்ப்புகள் இல்லாதவன் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அரசாங்கம் உதவி செய்யுமா? இதை நினைத்து சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்.
ராதாரவி:
சினிமா தொழிலை விட பிச்சை எடுக்கும் தொழில் சிறந்ததாக தெரிகிறது. காரணம், சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரில் ஒரு பிச்சைக்காரன் சாக்கு மூட்டை நிறைய சில்லரை காசு வைத்திருக்கிறானாம். அவனுக்கு வரி இல்லை. சிதம்பரம் வேறு மொழிக்காரர் அல்ல. நம் மொழி அவருக்கு தெரியும். இந்த சேவை வரி குறித்து முடிவு செய்ய வேண்டும். சினிமாக்காரனுக்கு வேறு தொழில் தெரியாது. நாங்கள் வாழ்ந்தால் மொத்தமாக வாழ்வோம். வீழ்ந்தால் மொத்தமாக வீழ்வோம். இந்த சேவை வரியை ரத்து செய்யவில்லையென்றால் கோர்ட்டில் ஸ்டே வாங்குவோம்.
சீனாவுடன் போர் நடந்தபோது லால்பகதூர் சாஸ்திரியை சந்தித்து தன் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கலியை கழட்டிக் கொடுத்தவர் கமலம்மாள் ஒரு நடிகை என்பதை மறக்க கூடாது. அதே நேரத்தில் கார்கில் போர் நேரத்திலும் திரையரங்கினரின் பங்களிப்பையும் யாரும் மறக்க முடியாது. இதையெல்லாம் நினைத்து இந்த சேவை வரியை ரத்த செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தங்களுடைய எதிர்ப்பை சுருக்கமாக எடுத்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படவிளக்கம்:
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரைஉலகினர் சேவை வரியை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார், ரஜினி காந்த், ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜயகுமார் மற்றும் பலர் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.